Don't Miss!
- News திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்குள் அந்த "சத்தம்".. கருவறை கிட்ட சேர்ல யாரு? திருவள்ளூர் கொடுமை
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இந்த நடிகைக்கு 'அந்த' ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பா?: ஷாக்கில் ஹீரோயின்கள்
ஹைதராபாத்: ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நிவேதா தாமஸ்.
கேரளாவை சேர்ந்தவர் நிவேதா தாமஸ். விஜய்யின் குருவி படம் மூலம் கோலிவுட் வந்தார். விஜய் தங்கையாக ஜில்லா படத்திலும், கமல் ஹாஸனுக்கு மகளாக பாபநாசம் படத்திலும் நடித்துள்ளார்.
போராளி, நவீன சரஸ்வதி சபதம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கு
நானியின் ஜென்டில்மேன் படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் கடந்த ஆண்டு அடியெடுத்து வைத்தார். டோலிவுட்டுக்கு சென்ற வேகத்தில் அவருக்கு பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆரின் புதுப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவர் ராசி கன்னா மற்றொருவர் நிவேதா தாமஸ். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.
நிவேதா
ஜூனியர் என்.டி.ஆர். படங்களில் பெரும்பாலும் இரண்டு ஹீரோயின்கள் இருப்பார்கள். அவரின் புதுப்படத்தின் கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் நிவேதா. அவர் ஜூன் அல்லது ஜூலை மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் மீண்டும் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நிவேதா.
அடேங்கப்பா
ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் எல்லாம் லைன் கட்டி நிற்க நிவேதாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பார்த்து முன்னணி ஹீரோயின்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.