Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் 2 புள்ளைகளுக்கு அம்மா, என்னை விட்டுடுங்க: இயக்குனரிடம் கூறிய பிரபல நடிகை
மும்பை: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை மாதுரி தீக்சித் பற்றிய விபரங்கள் இருக்காதாம்.
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி படமாக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத்தாக ரன்பிர் கபூர் நடிக்கிறார். ரன்பிர் தனது கதாபாத்திரமாக நடிப்பதை சஞ்சய் ஏற்கனவே கிண்டல் செய்துள்ளார்.
சஞ்சய் தத் பெரிய ஸ்டார் ஆனது, போதை-மது பழக்கத்தில் சிக்கியது, பெண்கள் தொடர்பு, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்து சிறைக்கு சென்றது ஆகிய விபரங்கள் படத்தில் இருக்குமாம்.
பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித் 1990களில் சஞ்சய் தத்தை காதலித்தார். டாக்டர் ஒருவரை திருமணம் செய்து இரண்டு மகன்களுக்கு தாயான மாதுரி தன்னை பற்றிய விபரத்தை படத்தில் வைக்க வேண்டாம் என ஹிரானிக்கு கோரிக்கை விடுத்தாராம்.
இதையடுத்து படத்தில் இருந்து மாதுரியின் விபரங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாம். சஞ்சய் தத் படத்தில் சோனம் கபூர் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிக்கிறார்கள். படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிடப்படுமாம்.