Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நான் 2 புள்ளைகளுக்கு அம்மா, என்னை விட்டுடுங்க: இயக்குனரிடம் கூறிய பிரபல நடிகை
மும்பை: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை மாதுரி தீக்சித் பற்றிய விபரங்கள் இருக்காதாம்.
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி படமாக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத்தாக ரன்பிர் கபூர் நடிக்கிறார். ரன்பிர் தனது கதாபாத்திரமாக நடிப்பதை சஞ்சய் ஏற்கனவே கிண்டல் செய்துள்ளார்.
சஞ்சய் தத் பெரிய ஸ்டார் ஆனது, போதை-மது பழக்கத்தில் சிக்கியது, பெண்கள் தொடர்பு, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்து சிறைக்கு சென்றது ஆகிய விபரங்கள் படத்தில் இருக்குமாம்.
பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித் 1990களில் சஞ்சய் தத்தை காதலித்தார். டாக்டர் ஒருவரை திருமணம் செய்து இரண்டு மகன்களுக்கு தாயான மாதுரி தன்னை பற்றிய விபரத்தை படத்தில் வைக்க வேண்டாம் என ஹிரானிக்கு கோரிக்கை விடுத்தாராம்.
இதையடுத்து படத்தில் இருந்து மாதுரியின் விபரங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாம். சஞ்சய் தத் படத்தில் சோனம் கபூர் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிக்கிறார்கள். படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிடப்படுமாம்.