Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
டோரா: ஜோடியில்லாமல் 'சோலோ'வாக நடிக்கும் நயன்தாரா!
சென்னை: நயன்தாரா நடிக்கும் 'டோரா' படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழின் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.
'நீ எங்கே என் அன்பே', 'மாயா' என நயன்தாராவை மையமாக வைத்து வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் ஹீரோயினை மையமாகக் கொண்ட படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.
'டோரா' என பெயர் சூட்டப்பட்டிருக்கும் அப்படத்தை அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்குகிறார்.விவேக்-மெர்வின் இசையமைக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் சற்குணம் தயாரிக்க, ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது நயன்தாராவுக்கு இப்படத்தில் ஜோடி கிடையாது. 'மாயா', 'நீ எங்கே என் அன்பே' போல இப்படத்தில் காதல் காட்சிகளும் கிடையாதாம்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் இடங்களில் 'டோரா' படத்தின் பெரும்பாலான காட்சிகளை படம் பிடிக்கவுள்ளனர். குறிப்பாக டைடல் பார்க், ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
'தனி ஒருவன்' புகழ் ஹரிஷ் உத்தமன் போலீஸ் அதிகாரியாக நடிக்க, பெங்களூரைச் சேர்ந்த சுலிலே குமார் வில்லனாக அறிமுகமாகிறார். ஒரு கொலை மற்றும் அதுசார்ந்த விசாரணைகளை சுற்றி நகரும் இக்கதையில் கார் ஒன்று முக்கியப் பங்கை வகிக்கும் என கூறப்படுகிறது.