Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
டோரா: ஜோடியில்லாமல் 'சோலோ'வாக நடிக்கும் நயன்தாரா!
சென்னை: நயன்தாரா நடிக்கும் 'டோரா' படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழின் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.
'நீ எங்கே என் அன்பே', 'மாயா' என நயன்தாராவை மையமாக வைத்து வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் ஹீரோயினை மையமாகக் கொண்ட படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.
'டோரா' என பெயர் சூட்டப்பட்டிருக்கும் அப்படத்தை அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்குகிறார்.விவேக்-மெர்வின் இசையமைக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் சற்குணம் தயாரிக்க, ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது நயன்தாராவுக்கு இப்படத்தில் ஜோடி கிடையாது. 'மாயா', 'நீ எங்கே என் அன்பே' போல இப்படத்தில் காதல் காட்சிகளும் கிடையாதாம்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் இடங்களில் 'டோரா' படத்தின் பெரும்பாலான காட்சிகளை படம் பிடிக்கவுள்ளனர். குறிப்பாக டைடல் பார்க், ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
'தனி ஒருவன்' புகழ் ஹரிஷ் உத்தமன் போலீஸ் அதிகாரியாக நடிக்க, பெங்களூரைச் சேர்ந்த சுலிலே குமார் வில்லனாக அறிமுகமாகிறார். ஒரு கொலை மற்றும் அதுசார்ந்த விசாரணைகளை சுற்றி நகரும் இக்கதையில் கார் ஒன்று முக்கியப் பங்கை வகிக்கும் என கூறப்படுகிறது.