Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டோரா: ஜோடியில்லாமல் 'சோலோ'வாக நடிக்கும் நயன்தாரா!
சென்னை: நயன்தாரா நடிக்கும் 'டோரா' படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழின் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.
'நீ எங்கே என் அன்பே', 'மாயா' என நயன்தாராவை மையமாக வைத்து வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் ஹீரோயினை மையமாகக் கொண்ட படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.
'டோரா' என பெயர் சூட்டப்பட்டிருக்கும் அப்படத்தை அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்குகிறார்.விவேக்-மெர்வின் இசையமைக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் சற்குணம் தயாரிக்க, ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது நயன்தாராவுக்கு இப்படத்தில் ஜோடி கிடையாது. 'மாயா', 'நீ எங்கே என் அன்பே' போல இப்படத்தில் காதல் காட்சிகளும் கிடையாதாம்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் இடங்களில் 'டோரா' படத்தின் பெரும்பாலான காட்சிகளை படம் பிடிக்கவுள்ளனர். குறிப்பாக டைடல் பார்க், ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
'தனி ஒருவன்' புகழ் ஹரிஷ் உத்தமன் போலீஸ் அதிகாரியாக நடிக்க, பெங்களூரைச் சேர்ந்த சுலிலே குமார் வில்லனாக அறிமுகமாகிறார். ஒரு கொலை மற்றும் அதுசார்ந்த விசாரணைகளை சுற்றி நகரும் இக்கதையில் கார் ஒன்று முக்கியப் பங்கை வகிக்கும் என கூறப்படுகிறது.