Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காதலே வேண்டாம் சாமி, நான் சிங்கிளாவே இருந்துவிட்டு போறேன்: நயன்தாரா
சென்னை: நயன்தாரா இனி காதலிக்கவே போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நயன்தாரா ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டார். ஆனால் அவர்கள் காதல் உறவு பாதியிலேயே முறிந்தது. திருமணத்தையொட்டி சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நயன் காதல் முறிவுக்கு பிறகு நடிக்க வந்துவிட்டார்.
பிரபுதேவாவோ மும்பை சென்று பாலிவுட்டில் பிசியாகிவிட்டார். மீண்டும் நடிக்க வந்த நயனுக்கும், ஆர்யாவுக்கும் காதல் என்று பேசப்பட்டு வருகிறது.
பாஸ்கரனில் துவங்கியது
பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நயன், ஆர்யா ஜோடியாக நடித்ததில் இருந்தே அவர்களுக்குள் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
திருமண அழைப்பிதழ்
ராஜா ராணி படத்தின் விளம்பரத்திற்காக நயன், ஆர்யாவுக்கு திருமணம் என்று அழைப்பிதழ் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்கள். அழைப்பிதழ் விவகாரத்தை ஆர்யா கண்டுகொள்ளவில்லை. ஆனால் நயன் தான் செம கடுப்பாகிவிட்டாராம்.
ஆர்யா நண்பர் மட்டுமே
ஆர்யா தனக்கு நண்பர் தான் என்றும், காதல் என்ற பெயரில் தனது வாழ்வில் பல சூறாவளிகள் வீசி ஓய்ந்துவிட்டதாகவும் நயன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
காதலே வேண்டாம்
காதல் கசந்துவிட்டதால் தான் இனிமேல் காதலிக்கவே போவதில்லை என்றும், தனியாக வாழவே ஆசைப்படுவதாகவும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.