Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இயக்குனர்களிடம் அடி வாங்குவதெல்லாம் அந்த காலமாக்கும்: கார்த்திகா
சென்னை: இயக்குனர்களிடம் அடி வாங்குவது எல்லாம் அந்த காலம் என்று கார்த்திகா தெரிவித்தார். மேலும் தன்னுடைய அம்மா, பெரியம்மா இடத்தை எந்த ஹீரோயினாலும் பிடிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் கார்த்திகா நடித்த அன்னக்கொடி படம் அண்மையில் ரிலீஸ் ஆனது. படத்தில் கார்த்திகாவின் நடிப்பு பேசப்பட்டுள்ளது. அவர் தற்போது பிருந்தாவனம் என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். மேலும் தமிழில் டீல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பிற மொழி படங்களை விட தமிழ் படங்களில் நடிக்கவே கார்த்திகா விருப்பமாக உள்ளார்.
அம்மா, பெரியம்மா இடத்தை யாராலும் பிடிக்க முடியாது
அம்மா ராதா, பெரியம்மா அம்பிகாவின் இடத்தை எந்த ஹீரோயினாலும் பிடிக்க முடியாது. அவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்கள். சூப்பர்ஸ்டார்களைப் போன்று அவர்களுக்கு ரசிகர்கள் இருந்தனர். தற்போது அப்படி இல்லை. ஏராளமான புதுமுக நடிகைகள் வருவதால் போட்டி அதிகம் என்றார் கார்த்திகா.
அனைத்து ஹீரோக்களையும் பிடிக்கும்
அனைத்து தமிழ் ஹீரோக்களையும் கார்த்திகாவுக்கு பிடிக்குமாம்.
முன்னணி இயக்குனர்
முன்னணி இயக்குனர்களின் படங்களில் தான் நடிப்பேன் என்றில்லை. வாய்ப்பு கிடைத்ததால் அப்படி நடித்தேன். ஆனால் பணத்திற்காக எனக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றார் கார்த்திகா.
அடிவாங்கியதெல்லாம் அந்த காலம்
இயக்குனர்களிடம் நடிகர், நடிகைகள் அடிவாங்கியது எல்லாம் அந்த காலம் என்று தெரிவித்துள்ளார் கார்த்திகா. பாரதிராஜா ரொம்பவே மாறிவிட்டார். ஷூட்டிங்கில் சின்ன பையன் போன்று ஜாலியாக பேசி எங்களை நடிக்க வைத்தார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.