ஹீரோயின்ஸ் பணக்கார பசங்க.. இல்லன்னா சுகர் டாடியதான் கல்யாணம் பண்ணுவாங்க.. சீண்டும் ஸ்ரீரெட்டி!
சென்னை: சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி மீண்டும் நடிகைகளை வம்பிழுத்துள்ளார்.
Recommended Video
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த திரைத்துறை பிரபலங்கள் பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறி பகீர் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை கிளப்பினார்.
தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள் என சாடி வரும் ஸ்ரீரெட்டி , நடிகைகளையும் அவ்வப்போது சீண்டி வருகிறார். அந்த வகையில் திரிஷா, சமந்தா என எல்லோரையும் பாரபட்சமின்றி சாடி வருகிறார் ஸ்ரீரெட்டி.

போலீஸில் புகார்
அண்மையில் கூட துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். அவர்கள் பற்றி ஆபாசமாக பேசி வீடியோக்களையும் வெளியிட்டார். இதனால் கடுப்பான கராத்தே கல்யாணி மற்றும் ராஜேஷ் ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர்.

உடல் உறுப்புக்களை
மேலும் தங்களை பற்றி உண்மைக்கு புறம்பான விஷயத்தை ஸ்ரீரெட்டி கூறி வருவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து தன்னுடைய உடல் உறுப்புகளை ஒப்பிட்டு நடிகைகள் சமந்தா மற்றும் திரிஷாவை வம்பிழுத்தார் ஸ்ரீரெட்டி.

சமந்தா கிரேப்ஸ்
தன்னுடைய மோசமான போட்டோ ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்த ஸ்ரீரெட்டி அந்த போட்டோவுக்கு சமந்தாவின் எலுமிச்சை பழமும் திரிஷாவின் திராட்சைகளும் எனக்கு முன்பு ஒன்றுமே இல்லை என கேப்ஷன் கொடுத்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றவர்களுடன் ஏன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என கமென்ட் பதிவிட்டனர்.

ஸ்ருதிராஜ் மீது புகார்
பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அழகு சீரியல் நாயகி ஸ்ருதி ராஜ் தன்னுடைய காரை சேதப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார் ஸ்ரீரெட்டி. மேலும் நடிகை ஸ்ருதிராஜ் மற்றும் சீரியலின் மேனேஜர் உள்ளிட்ட பலர் மீதும் போலீஸில் புகார் அளித்தார் ஸ்ரீரெட்டி.

சுகர் டாடிகள்
இந்நிலையில் ஒட்டு மொத்த ஹீரோயின்களையும் சீண்டியிருக்கிறார் ஸ்ரீரெட்டி. இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, படங்களின் ஹீரோயின்ஸை 99 சதவீதம் இன்ஸ்பையரேஷனாக எடுத்துக் கொள்ளாதீர்கள், அவர்கள் பணக்கார ஹேண்ட்சம் பசங்களையும் சுகர் வந்த டாடிக்களையும் தான் கல்யாணம் பண்ணுவார்கள்.

ஏழை கணவர்கள்தான்
ஏழை இளைஞர்கள் படத்தின் டிக்கெட் வாங்கதான் மட்டும்தான் தேவை என பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் திரைப்பட நடிகைகளால், நார்மல் பெண்களும் கெட்டுப் போகிறார்கள். நடிகைகளை உத்வேகமாக எடுத்துக்கொண்டு, எல்லோரும் பணக்கார கணவர்தான் தேவை என்கிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சனையில் ஏழை கணவர்கள்தான் இறக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











