Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தியேட்டரில் தேசிய கீதத்திற்கு மதிப்பு கொடுக்காத வாலிபரை விரட்டிய ப்ரீத்தி ஜிந்தா
மும்பை: சினிமா தியேட்டரில் தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்த வாலிபரை அந்த இடத்தை விட்டு வெளியேற்றியுள்ளார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
தைரியத்திற்கும், தில்லான செயல்களுக்கும் பெயர் போனவர் ப்ரீத்தி. அதிரடியாக செயல்படக் கூடியவரும் கூட.
எதைச் செய்தாலும் பக்காவாக செய்பவரும் கூட. முட்டாள்தனமாக இருக்காமல், புத்திசாலியாக செயல்படக் கூடியவரும் கூட.
விரட்டிய ப்ரீத்தி ஜிந்தா
கடைசியாக இவர் நடித்த படம் இஷ்க் இன் பாரீஸ். இந்த நிலையில் தியேட்டர் ஒன்றுக்குப் போயிருந்த ப்ரீத்தி, அங்கு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது எழுந்திருக்காமல் அமர்ந்த வாலிபரை தியேட்டரை விட்டு விரட்டியுள்ளார்.
தேசிய கீதத்திற்கு மதிப்பு
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ப்ரீத்தி ஜிந்தா, பேங் பேங் படம் பார்க்கப் போயிருந்தேன். அப்போது தியேட்டரில் ஒரு நபர் நமது தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்திருக்கவில்லை. இதையடுத்து நான் அவரை அங்கிருந்து வெளியே விரட்டி விட்டு விட்டேன். இதை உங்களால் நம்ப முடிகிறதா.. சரி, இப்போது நான் படம் பார்க்கும் நேரம் என்று கூறியுள்ளார்.
மும்பை வீதிகளில் சுத்தம்
இப்படி அதிரடியாக ப்ரீத்தி செயல்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2005ம் ஆண்டு அவரும், ஷாருக்கானும் சேர்ந்து மும்பை நகர வீதிகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
தூய்மை பாரதம்
மேலும் பிரதமர் மோடி தூய்மை பாரதம் திட்டத்தை தொடங்கியபோது அதை வரவேற்று டிவிட் செய்த ப்ரீத்தி, தான் ஏற்கனவே அதில் முன்பே பங்கேற்று விட்டதாகவும் கூறியிருந்தார்.