இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசிக்கு ஆண் குழந்தை!
சென்னை: இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை ஊர்வசிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ், மலையாள பட உலகில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தவர் ஊர்வசி. இவருக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000-ல் திருமணம் நடந்தது.

எட்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தேஜாலட்சுமி என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டினர்.
2008 - ல் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும் செய்து கொண்டனர். தேஜாலட்சுமி அப்பாவுடனே வசிக்கிறார். ஊர்வசி மீண்டும் அக்கா, அம்மா வேடங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.
கடந்த வருடம் சிவபிரசாத் என்பவரை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சிவிபிரசாத் சென்னையில் கட்டுமான தொழில் செய்து வருகிறார்.
இரண்டாவது திருமணம் மூலம் கர்ப்பமான ஊர்வசிக்கு நேற்று தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.


Click it and Unblock the Notifications











