Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விவாகரத்து வழக்கு - முன்னாள் கணவரிடம் மகளை ஒப்படைத்தார் ஊர்வசி!
தமிழ் திரை உலகில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஊர்வசி. கன்னடம், மலையாளம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் பிறந்தனர்.
ஆனால் ஊர்வசி - மனோஜ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பரஸ்பர விவாகரத்து பெற்றனர்.
ஆனால் அவர்களில் 2 மகள்களும் ஊர்வசி பாதுகாப்பில் இருந்தனர். எனவே இரு மகள்களையும் தன்னிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்று மனோஜ் கே.ஜெயன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இரண்டாவது மகள் குஞ்சாச்சாவை மட்டும் மனோஜ் கே.ஜெயனிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து ஊர்வசி தன் இளைய மகளை அவரிடம் ஒப்படைத்தார். எர்ணாகுளம் நீதிமன்றத்துக்கு மகளை அழைத்துப் போனார் மனோஜ் கே ஜெயன்.