Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விவாகரத்து வழக்கு - முன்னாள் கணவரிடம் மகளை ஒப்படைத்தார் ஊர்வசி!
தமிழ் திரை உலகில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஊர்வசி. கன்னடம், மலையாளம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் பிறந்தனர்.
ஆனால் ஊர்வசி - மனோஜ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பரஸ்பர விவாகரத்து பெற்றனர்.
ஆனால் அவர்களில் 2 மகள்களும் ஊர்வசி பாதுகாப்பில் இருந்தனர். எனவே இரு மகள்களையும் தன்னிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்று மனோஜ் கே.ஜெயன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இரண்டாவது மகள் குஞ்சாச்சாவை மட்டும் மனோஜ் கே.ஜெயனிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து ஊர்வசி தன் இளைய மகளை அவரிடம் ஒப்படைத்தார். எர்ணாகுளம் நீதிமன்றத்துக்கு மகளை அழைத்துப் போனார் மனோஜ் கே ஜெயன்.