Don't Miss!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'நடிகையின் வாக்குமூலம்'த்தில் செல்வராகவனை 'வெறுப்பேற்றுகிறாரா' சோனியா?
'ஒரு நடிகையின் வாக்கு மூலம்' என்ற பெயரில் நடிகர், நடிகைகளின் நிஜ வாழ்க்கை கதை படமாகிறது. இந்த படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இதில் பாதிக்கப்படும் நடிகை வேடத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார். திருமணமாகி, விவாகரத்து பெற்ற பிறகு சோனியா ஹீரோயினாக நடிக்கும் படம் இது.
நடிகையான பிறகு சோனியா சந்தித்த நெருக்கடிகள் மற்றும் திருமண வாழ்க்கை விவாகரத்து போன்றவை இதில் இடம்பெற்றுள்ளனவாம். சோனியா அகர்வாலின் சொந்த வாழ்க்கையே இந்த படம் என்றும் கணவர் வேடத்தில் நடிக்க செல்வராகவன் தோற்றத்தில் நடிகர் தேடுவதாகவும் செய்திகள் வெளியாயின.
இதுகுறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணாவிடம் கேட்ட போது, "நான் நிறைய நடிகைகளை சந்தித்திஇருக்கிறேன். அவர்கள் பட்ட சிரமங்களை நேரில் அறிந்தும் இருக்கிறேன். அதை 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற பெயரில் படமாக எடுக்கிறேன். ஒவ்வொரு நடிகையின் வாழ்வில் நடந்த ஓரிரு சம்பவங்கள் இப்படத்தில் இருக்கும். அப்படி எல்லா நடிகைகளும் சந்தித்த நிகழ்வுகள் இப்படத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
இப்படம் முழுக்க சோனியா அகர்வாலின் வாழ்க்கை கதை என்பது சரியல்ல. கதையைக் கேட்டபோது, என் வாழ்க்கையிலும் இதுபோன்று ஓரிரு சம்பவங்கள் நடந்துள்ளன என்றார் சோனியா. அவர் நடிப்பதால் இந்தப் படம் அவரது சொந்த வாழ்க்கைக் கதையின் அடிப்படையில் படமாக்கப்படுவதாக ஒரு இமேஜ் பரவிவிட்டது. அவர் வாழ்க்கையில் நடந்தவை இரண்டே சீன்கள்தான் படத்தில் இருக்கும்.
செல்வராகவன் போன்று இப்படத்தில் ஒரு கேரக்டரை உருவாக்கி இருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை. நடிகைகளான எனது சகோதரிகளை புண்படுத்தும் காட்சிகளோ சக இயக்குநரை அவமதிக்கும் காட்சியோ இப்படத்தில் இருக்காது," என்றார்.