twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ்ல என்னை ஏன் ஒதுக்கறாங்கன்னே தெரியலயே! - பத்மப்ரியா

    By Shankar
    |

    கொச்சி: தமிழ் சினிமாவில் என்னை ஒதுக்குகிறார்கள்.. வாய்ப்பு தருவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் பத்மப்பிரியா.

    தொடர்ந்து சர்ச்சைகளின் நாயகியாக திகழ்கிறார் பத்மப்ரியா. கன்னத்தில் அறைந்ததாகக் கூறி, இயக்குநர் சாமியை மன்னிப்புக் கேட்க வைத்தவர், அடுத்து மலையாளத்தில் மேனேஜருக்கு கூடுதல் சம்பளம் கேட்டு பிரச்சினை செய்தார்.

    இதனால் நடிகர் நடிகைகள் யாரும் மேனேஜரே வைத்துக் கொள்ளக் கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது மலையாள சினிமா உலகம்.

    இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழ் சினிமா தன்னை ஒதுக்குவதாகக் கூறியுள்ளார்.

    அவர் அளித்த பேட்டி:

    தமிழில் எனக்கு நீண்ட இடைவெளி விழுந்துள்ளது. படங்களே இல்லை. இயக்குனர்கள் என்னை ஏன் ஒதுக்குகிறார்கள் என்ற காரணமும் தெரியவில்லை.

    என்னைப் பொறுத்தவரை தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். ஏற்கனவே 'இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்' படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளேன்.

    இயக்குனர் சாமி அடித்த விவகாரம் மற்றும் மானேஜர் பிரச்சினைகளால் என்னை சர்ச்சைக்குரியவராக பார்ப்பது சரியல்ல. நான் 45 படங்களில் நடித்துள்ளேன்," என்று கூறியுள்ளார்.

    ப்ரொபைல் போட்டோ கொடுத்து சான்ஸ் கேட்பது போய், இப்படி பேட்டி கொடுத்து கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் நடிகைகள்!

    English summary
    Actress Padmapriya told that she is ready to do any kind of roles in Tamil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X