twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்மப்ரியாவுக்குப் புதுப் படம்

    By Staff
    |

    Padmapriya
    'மிருகத்துடன்' நடந்த மோதலுக்குப் பின்னர் புதுப் படத்தில் புக் ஆகியுள்ளார் பத்மப்ரியா.

    சர்ச்சை நாயகியாக அவதாரம் எடுத்துள்ள பத்மப்ரியா, லேட்டஸ்டாக மிருகம் படத்தின் ஷூட்டிங்கின்போது பஞ்சாயத்தைக் கூட்டினார். இயக்குநர் சாமி அடித்து விட்டதாக கூறி படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய அவர் சாமி மீது பாலியல் புகார்களையும் கூறினார்.

    ஆனால் அது உண்மையல்ல என்று தயாரிப்பாளர் கவுன்சில் விசாரணையின்போது தெரிய வந்தது. இந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக சாமிக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

    மிருகம் படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. படம் நன்றாக வந்திருப்பதாகவும் கோலிவுட்டில் படு சூடாக டாக் நிலவுகிறது.

    இந்த நிலையில் மிருகம் சர்ச்சைக்குப் பின்னர் பத்மப்ரியாவுக்குப் புதுப் படம் கிடைத்துள்ளது. அதிரடி நாயகன் அர்ஜூனுடன் இணைந்து நடிக்கப் போகிறார் பத்மா.

    துரை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். மசாலாப் பட மன்னன் என்று கூறும் அளவுக்கு கமர்ஷியல் ரீதியிலான படங்களை இயக்குவதில் கில்லாடி வெங்கடேஷ்.

    தேனப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பத்மப்ரியா நடிக்கவுள்ள முதலாவது மிகப் பெரிய கமர்ஷியல் படமாகும்.

    வடிவேலுவின் அதிரடி காமெடி படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். அதேபோல அர்ஜூனுக்கு பிடித்தமான இசையமைப்பாளர் இமான்தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கப் போகிறார்.

    இப்படத்தில், இசைஞானி இளையராஜாவின் துள்ளல் பாடலான ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்ற அக்னி நட்சத்திரப் பாடலை ரீமிக்ஸ் செய்யவுள்ளாராம் இமான்.

    வழக்கமான அர்ஜூன் பட அம்சங்கள் நிறைந்திருக்கும் இந்தப் படத்தில் பத்மப்ரியா நடிக்கவுள்ளதுதான் திரையுலகில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அர்ஜூன் படத்தில் ஆக்ஷன் மட்டும் அதிரடியாக இருக்காது, கூடவே கிளாமரும் சேர்ந்து கும்மியடிப்பது வழக்கம். ஆனால் பத்மப்ரியா இதுவரை பெரிய அளவில் கிளாமர் காட்டி நடித்ததில்லை. அப்படி நடிக்க முயற்சித்தும் அதில் வெல்ல முடியவில்லை. பட்டியல் படத்தில் கூட அவர் கிளாமர் என்ற பெயரில் ஏனோதானோவென்று வந்தும் கூட அது ரசிக்கப்படவில்லை.

    இதுவரை பத்மப்ரியாவை கவர்ச்சி நடிகையாக இதுவரை யாரும் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. இந்த நிலையில் பத்மப்ரியா எப்படி, அர்ஜூன் படத்தில் என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது.

    இதுகுறித்து இயக்குநர் வெங்கடேஷ் கூறுகையில், இந்த கதைக்கு பத்மப்ரியாதான் பொருத்தானவர். தனது ரோலுக்கு அவர் பொருத்தமாக இருப்பார், சிறப்பாக நடிப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார். உளுந்தூர்ப்பேட்டையில் நாளை படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

    சண்டை, கிண்டை போடாமல் நல்லபடியா முடிச்சு விடுங்க பத்மா!

    Read more about: arjun padmapriya
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X