Don't Miss!
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பேசியதை விட அதிக கேட்டு மலையாள இயக்குநருடன் நடிகை பத்மப்ரியா மோதல்!
நடிகை பத்மபிரியாவுக்கும் மலையாள இயக்குனர் நிஷாந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நிஷாந்த் இயக்கும் நம்பர் 66 மதுரை பஸ் என்ற படத்தில் பத்மபிரியாதான் கதாநாயகி.
தனது மானேஜருக்கு சம்பளம் தர வேண்டும் என்று இயக்குனரிடம் பத்மபிரியா நச்சரித்து உள்ளார். மலையாள நடிகர், நடிகைகள் தங்களுக்கு மானேஜர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேரள தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து உள்ளது. அதனை காரணம் காட்டி மானேஜருக்கு சம்பளம் தர நிஷாந்த் மறுத்து விட்டார்.
இதையடுத்து நம்பர் 66 மதுரை பஸ் படப்பிடிப்பை பத்மபிரியா புறக்கணித்து விட்டார். இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பத்மபிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தயாரிப்பானர் சங்கத்தில் நிஷாந்த் புகார் அளித்துள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து நிஷாந்த் கூறுகையில், "நடிகர், நடிகைகள் மானேஜர் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மலையாள தயாரிப்பாளர் சங்கம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதையும் மீறி பத்ம பிரியா மானேஜர் ஒருவரை நியமித்து கமிஷன் கேட்கிறார்.
அதாவது பத்மபிரியா சம்பளத்தில் இருந்து 20 முதல் 25 சதவீதம் கமிஷனாக கேட்கிறார். அந்த தொகையை அளிக்கும்படி பத்மபிரியா எங்களை நிர்ப்பந்தம் செய்கிறார். அவரை ரூ.8 லட்சம் சம்பளத்துக்கு தான் ஒப்பந்தம் செய்தேன். படத்தின் டி.வி. உரிமையை விற்றதும் ரூ.10 லட்சம் சம்பளம் வேண்டும் என்கிறார். படப்பிடிப்புக்கும் வர மறுக்கிறார்," என்றார்.
இது குறித்து பத்ம பிரியாவிடம் கேட்டபோது, "இயக்குனர் நிஷாந்த்தக்கும் எனக்கும் இடையே உள்ள சர்ச்சையை ஏன் பெரிது படுத்துகிறார்கள் என்று புரியவில்லை. இந்த விவகாரம் தேசிய அளவிலான பிரச்சினைகளை தீர்த்து வைத்து விடுமா? நிஷாந்துக்கும் எனக்குமிடையிலான சர்ச்சையை வெளிப்படையாக பேச நான் விரும்ப வில்லை. என்ன சொல்ல வேண்டுமோ அதை தயாரிப்பாளர் சங்கத்தில் சொல்வேன்," என்றார்.