twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்ரியாவின் விருந்து! தவமாய் தவமிருந்து படத்தில் குடும்ப குத்துவிளக்கு மாதிரி நடித்த பத்மப்ரியா தனதுதவத்தைக் கலைத்துவிட்டார் போலிருக்கிறது.பட்டியல் படத்தில் அவர் போட்டிருக்கும் ஆட்டம் மிக ரவுசாக வந்திருக்கிறது. சின்னபாவாடை, தாவணியில், தாவணியை நடுவில் விட்டுக் கொண்டு, தொப்புளைக்காட்டிக் கொண்டு (பார்த்தும்மா.. கோலிவுட்ல பம்பரம் விட்டுருவாங்க) அவர்கண்ணாபின்னா டான்ஸ் போட்டிருக்கிறார்.நம்ம பத்மாவா இது என்று பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்தடான்ஸ்.இந் நிலையில் மற்ற நடிகைகளின் வயிற்றெரிச்சலையும் சம்பாதிக்கஆரம்பித்துவிட்டாராம் பத்மப்ரியா. வாய்ப்புகளைப் பிடிப்பதில் படு சுட்டியாக இருக்கும் இவர் தில்லாலங்கடிவேலைகளில் பெரிய ஆளாக இருப்பார் போல.முன்னணி இயக்குனர்களை நேரில் போய் பார்த்து தனது சிரிப்பலையால் அவர்களைமூழ்கடித்து தன் பக்கம் ஈர்த்து விடுகிறார்.பத்மப்ரியாவின் இந்த அதிரடியால் சில நடிகைகளுக்குக் கிடைக்கவிருந்த வாய்ப்புகள்பறிபோய்விட்டனவாம்.பத்மப்ரியாவின் பகாசுரப்ரியாவாக இருக்கிறாரே என வாய்ப்புகளைப் பறிகொடுத்தநடிகைகள் புலம்பி வருகிறார்கள். பட்டியல் படத்தில் நடித்து முடித்த கையோடு இப்போது மலையாளத்தில் நடிக்கப்போயிருக்கிறார் ப்ரியா. தமிழ்ப் பெண்ணான பத்மா வளர்ந்தது பெங்களூரில். இவரதுஅப்பாவுக்கு சொந்த ஊர் வேலூர், அம்மாவுக்கு திருநெல்வேலியாம்.இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கிய பட்டியல் படத்தில் ப்ரியாவும், ஆர்யாவும்சேர்ந்து கிளாமர் விளையாட்டுக்களில் புகுந்து விளையாடியுள்ளது தெரியும்.அதே போல படப்பிடிப்பின்போது ஆர்யாவுடன் நட்பு நெருக்கமாகிவிடவே, படக்காட்சிகள் தவிர தனிப்பட்ட முறையிலும் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ஓடிப்பிடித்து விளையாடி குதூகலப்படுத்தினார்களாம்.(பட்டியலைத் தயாரித்துள்ளது புன்னகைப் பூ கீதா. இவரது முதல் படமான அறிந்தும்அறியாமலும் படத்தையும் விஷ்ணு தான் இயக்கினார். இப்போது கீதா-விஷ்ணுஇடையிலும் லவ்ஸ் வந்துவிட்டதாக சொல்கிறார்கள் கோலிவுட்டில்) நல்ல நடிகையான பத்மாவை இப்படி கிளாமர் குளத்தில் கல்லைக் கட்டிதள்ளிவிட்டுவிட்டார்களே என சேரன் போன்றவர்கள் கவலைப்படுகிறார்களாம்.ஆனால், தவமாய் தவமிருந்து படத்தைப் போன்ற கேரக்டர்களில் தான் நடிப்பேன்என்று பத்மா அடம்பிடித்துப் பார்த்தார். புரடியூசர்கள் எல்லாம் வந்த வேகத்தில்திரும்பிப் போனதையடுத்து தான் கிளாமர் விருந்து படைக்க ஆரம்பித்திருக்கிறாராம்.பத்மாவின் ஒத்துழைப்பைக் கேள்விப்பட்ட கன்னட இயக்குனரான உபேந்திரா, தனதுபடத்தில் ஒரு குத்தாட்டத்துக்கு அழைத்திருக்கிறார். சம்பளம் ரூ. 10 லட்சம் என்றும்செக்கை நீட்ட உடனே வாங்கிப் போட்டுக் கொண்டாராம் பத்மா.அந்தப் பாடலிலும் வகையான கிளாமரில் வலம் வரவுள்ளாராம் பத்மப்ரியா.

    By Staff
    |

    தவமாய் தவமிருந்து படத்தில் குடும்ப குத்துவிளக்கு மாதிரி நடித்த பத்மப்ரியா தனதுதவத்தைக் கலைத்துவிட்டார் போலிருக்கிறது.

    பட்டியல் படத்தில் அவர் போட்டிருக்கும் ஆட்டம் மிக ரவுசாக வந்திருக்கிறது. சின்னபாவாடை, தாவணியில், தாவணியை நடுவில் விட்டுக் கொண்டு, தொப்புளைக்காட்டிக் கொண்டு (பார்த்தும்மா.. கோலிவுட்ல பம்பரம் விட்டுருவாங்க) அவர்கண்ணாபின்னா டான்ஸ் போட்டிருக்கிறார்.

    நம்ம பத்மாவா இது என்று பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்தடான்ஸ்.

    இந் நிலையில் மற்ற நடிகைகளின் வயிற்றெரிச்சலையும் சம்பாதிக்கஆரம்பித்துவிட்டாராம் பத்மப்ரியா.


    வாய்ப்புகளைப் பிடிப்பதில் படு சுட்டியாக இருக்கும் இவர் தில்லாலங்கடிவேலைகளில் பெரிய ஆளாக இருப்பார் போல.

    முன்னணி இயக்குனர்களை நேரில் போய் பார்த்து தனது சிரிப்பலையால் அவர்களைமூழ்கடித்து தன் பக்கம் ஈர்த்து விடுகிறார்.

    பத்மப்ரியாவின் இந்த அதிரடியால் சில நடிகைகளுக்குக் கிடைக்கவிருந்த வாய்ப்புகள்பறிபோய்விட்டனவாம்.

    பத்மப்ரியாவின் பகாசுரப்ரியாவாக இருக்கிறாரே என வாய்ப்புகளைப் பறிகொடுத்தநடிகைகள் புலம்பி வருகிறார்கள்.


    பட்டியல் படத்தில் நடித்து முடித்த கையோடு இப்போது மலையாளத்தில் நடிக்கப்போயிருக்கிறார் ப்ரியா. தமிழ்ப் பெண்ணான பத்மா வளர்ந்தது பெங்களூரில். இவரதுஅப்பாவுக்கு சொந்த ஊர் வேலூர், அம்மாவுக்கு திருநெல்வேலியாம்.

    இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கிய பட்டியல் படத்தில் ப்ரியாவும், ஆர்யாவும்சேர்ந்து கிளாமர் விளையாட்டுக்களில் புகுந்து விளையாடியுள்ளது தெரியும்.

    அதே போல படப்பிடிப்பின்போது ஆர்யாவுடன் நட்பு நெருக்கமாகிவிடவே, படக்காட்சிகள் தவிர தனிப்பட்ட முறையிலும் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ஓடிப்பிடித்து விளையாடி குதூகலப்படுத்தினார்களாம்.

    (பட்டியலைத் தயாரித்துள்ளது புன்னகைப் பூ கீதா. இவரது முதல் படமான அறிந்தும்அறியாமலும் படத்தையும் விஷ்ணு தான் இயக்கினார். இப்போது கீதா-விஷ்ணுஇடையிலும் லவ்ஸ் வந்துவிட்டதாக சொல்கிறார்கள் கோலிவுட்டில்)


    நல்ல நடிகையான பத்மாவை இப்படி கிளாமர் குளத்தில் கல்லைக் கட்டிதள்ளிவிட்டுவிட்டார்களே என சேரன் போன்றவர்கள் கவலைப்படுகிறார்களாம்.

    ஆனால், தவமாய் தவமிருந்து படத்தைப் போன்ற கேரக்டர்களில் தான் நடிப்பேன்என்று பத்மா அடம்பிடித்துப் பார்த்தார். புரடியூசர்கள் எல்லாம் வந்த வேகத்தில்திரும்பிப் போனதையடுத்து தான் கிளாமர் விருந்து படைக்க ஆரம்பித்திருக்கிறாராம்.

    பத்மாவின் ஒத்துழைப்பைக் கேள்விப்பட்ட கன்னட இயக்குனரான உபேந்திரா, தனதுபடத்தில் ஒரு குத்தாட்டத்துக்கு அழைத்திருக்கிறார். சம்பளம் ரூ. 10 லட்சம் என்றும்செக்கை நீட்ட உடனே வாங்கிப் போட்டுக் கொண்டாராம் பத்மா.

    அந்தப் பாடலிலும் வகையான கிளாமரில் வலம் வரவுள்ளாராம் பத்மப்ரியா.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X