அடடே இப்படியும் கூட பிரேக்பாஸ்ட் சாப்பிடலாமா?
நடிகை பரினீத்தி சோப்ரா ஹாலிடே புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
மும்பை: பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா ஹாலிடே புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், மூன்று வேளையும் உட்கார்ந்து திருப்தியாக சாப்பிட வேண்டுமென்றுதான் ஆசைப்படுவான்.

ஆனால், மூன்று வேளையும் உக்கார்ந்து சாப்பிடுவதெல்லாம் போர்... மிதந்து கொண்டே சாப்பிடுவது தான் ஜாலி என்கிறார் பரினீத்தி சோப்ரா.
இப்போது அக்ஷய் குமாருடன் கேசரி என்ற படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் கபூருடன் நமஸ்தே இங்கிலாந்து இந்த வருடமும், சந்தீப் அவுர் பிங்கி பரார் என்ற படம் அடுத்த ஆண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.
இப்போது மாலத்தீவில் கூலாக ஊர் சுற்றிவரும் பரினீத்தி, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புளகாங்கிதப்படுத்துகிறார். அந்த வகையில், மிதந்து கொண்டே காலை உணவு சாப்பிடும் போட்டோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இப்படி தண்ணீரில் மிதந்து கொண்டே சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என நவீன மருத்துவம் சொல்கிறது. காரணம், தண்ணீருக்குள் உடல் மூழ்கி இருக்கும்போது எடை குறையும். அதனால் சாப்பிடும் அளவில் மாற்றம் ஏற்பட்டு பசியறியாமல் அதிகமாக உண்ணக்கூடும் என்பது பரினீத்திக்கு தெரியாதா?


Click it and Unblock the Notifications











