பார்வதி நாயர்... அஜீத்துக்கு 3வது ஹீரோயின்!
கவுதம் மேனன் இயக்கி வரும் புதிய படத்தில் அஜீத்துக்கு 3வது நாயகியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.
தல 55 என்று அழைக்கப்படும் அழைத்து வரும் இந்தப் படத்தில், நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். இந்நிலையில் 3வது நாயகியாக பார்வதி நாயர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் மலையாளம், கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில்' படத்தில் நடித்துள்ளார். மேலும் கமல் நடித்து வரும் ‘உத்தம வில்லன்' படத்திலும் 3வது நாயகியாக நடித்துள்ளார். தற்போது அஜீத் படத்திலும் 3வது கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத்துடன் இணைந்துள்ளார் விவேக். முதல் முறையாக வில்லன் வேடமேற்றுள்ளார் அருண்விஜய்.


Click it and Unblock the Notifications











