ஆண்ட்ரியா தவறான உறவு வைத்திருந்த அந்த திருமணமான நபர் யாரா இருக்கும்?
Recommended Video
சென்னை: நடிகை ஆண்ட்ரியா தவறான உறவு வைத்திருந்ததாக கூறிய அந்த திருமணமான நபர் யாராக இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார் நடிகை ஆண்ட்ரியா. அண்மையில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளானதால் மாதக்கணக்கில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இதனால் ஆண்ட்ரியாவின் மன அழுத்தத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் யோசிக்க தொடங்கினர் ரசிகர்கள். யோசித்துக் கொண்டிருக்கும் போதே பெங்களூரில் நடைபெற்ற கவிதை போட்டியில் பங்கேற்றார் ஆண்ட்ரியா.

சோகத்திற்கான காரணம்
அப்போது முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கவிதை தொகுப்பு சோகமே உருவாய் இருந்தது. இதுகுறித்து கேட்டபோதுதான் தனது மனஅழுத்தத்திற்கான காரணத்தையும் இந்த சோகத்திற்கான காரணத்தையும் கூறினார்.

தாங்க முடியாத கொடுமைகள்
அதாவது, தனது துறையில் உள்ள திருமணம் ஆன நண்பருடன் தவறான உறவில் இருந்தாராம் நடிகை. இதனால் தனது இச்சைக்கு தினமும் நடிகையை பயன்படுத்திக்கொண்ட அந்த நண்பர் உடலளவில் அனுபவிக்க முடியாத கொடுமைகளை செய்துள்ளார்.

ஆயுர்வேத சிகிச்சை
உடலளவில் நாள்தோறும் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதுதொடர்பாகதான் ஆயுர்வேத சிகிச்சை பெற்றிருக்கிறார்.

யோசிக்கும் ரசிகர்கள்
இந்த தகவலை கூறிய ஆண்ட்ரியா தன்னை அத்தனை சித்ரவதை செய்த அந்த நபர் யார் என்று இதுவரை சொல்லவில்லை. நடிகை கூறிய தகவலால் அவரது ரசிகர்களும் இந்த அளவுக்கு கொடுமைப்படுத்தியது யார் என யோசிக்க தொடங்கி விட்டனர்.

யாரா இருக்கும்?
இதனால் ஆண்ட்ரியாவின் நட்பு வட்டாரத்தில் இருந்த திருமணமான ஆண்கள் யார்? யாரிடம் ஆண்ட்ரியா மிகுந்த நெருக்கத்துடன் இருந்தார் என கணக்கு போட்டு வருகின்றனர். யாரா இருக்கும்?


Click it and Unblock the Notifications











