புடவையில் ஏக்கத்துடன் நிற்கும் பிச்சைக்காரன் 2 பட நடிகை..இதுவும் நல்லா தான் இருக்கு!
சென்னை :புடவையில் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ரித்திகா. நடிகர் மாதவனுடன் இணைந்து இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் ரித்திகா சிங்.
உண்மையிலேயே இவர் குத்து சண்டை வீராங்கனை என்பதால் ,அப்படத்தில் அவர் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
எதார்த்தமாக இருக்கும் ரித்திகா, துரு துரு நடிப்பு என்று அந்த படத்தில் வெளுத்து வாங்கினார்.அந்த படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

வாலு பொண்ணு
இறுதிசுற்று படத்தின் மூலம் அறிமுகம் ஆன ரித்திகா,அப்படத்தில் ரொம்பவும் சேட்டை செய்யும் பெண்ணாகவும்,பேண்ட் சட்டை அணிந்து கொண்டு எதார்த்தமாக நடித்து ஒரே படத்தில் பல ரசிகர்களை பெற்றார். மாதவனுடன் இணைத்து நடித்ததால் மாதவன் ரசிகர்களும் படத்தை கொண்டாடினர்.

குத்து சண்டை
நிஜமாகவே இவர் குத்து சண்டை வீராங்கனை என்பதால்,அப்படத்தில் வரும் கதாபாத்திரமும் இவருக்கு நன்றாகவே கைகொடுத்தது.அதன் பிறகு வந்த ஆண்டவன் கட்டளை,சிவலிங்கா போன்ற சில படங்கள் வெற்றி பெறவில்லை.அதன் பிறகு வெளிவந்த ஓ மை கடவுளே படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கவர்ச்சி கூட்டி
எப்போதும் அளவான கவர்ச்சியுடன் இருக்கும் ரித்திகா,சமீக காலமாக செம கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.சமீபத்தில் அவரை கவர்ச்சியில் பார்த்த ரசிகர்களுக்கு இவர் அவர் தானா என்ற குழப்பமே வந்துவிட்டது.அந்த அளவுக்கு பல கிளாமர் புகைப்படங்களை தனது சமூகவலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு வருகிறார் .புடவையில் ஜன்னல் ஓரம் ஏக்கத்துடன் நிற்கும் ரித்திகாவை ரசிகர்கள் வர்ணித்தும் வருகின்றனர் .

புடவையில் சூப்பர்
மாடர்ன் உடைகளில் மட்டும் இல்லாமல்,புடைவையில் இருந்தாலும் இப்போதெல்லாம் கவர்ச்சியாகவே இருக்கிறார் ரித்திகா.இவர் பதிவிடும் பதிவிற்கு பல கமெண்டுகளும், லைக்குகளும் குவிந்து வருகின்றது.தற்போது பாக்சர், வணங்காமுடி போன்ற படத்திலும் நடித்து வருகிறார்.மேலும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்திலும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது கவர்ச்சி இப்படத்தில் கைகொடுக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .


Click it and Unblock the Notifications











