Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சினேகாவைச் சூழ்ந்த ரசிகர்கள்... லேசான தடியடி நடத்தி மீட்ட போலீஸ்
அவரை மீட்க போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
பிரபல நடிகை சினேகா ஏராளமான கடை திறப்பு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போதெல்லாம் அவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் சூழந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
இந்த முறையும் இதே மாதிரி சம்பவம் நடந்தது. சமீபத்தில் திருப்பூரில் ஒரு பெரிய நகைக்கடை திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார் சினேகா. திருப்பூரில் சினேகா இறங்கியதுமே கூட்டம் எக்கச்சக்கமாகக் கூடிவிட்டது.
ஆரம்பத்தில் உற்சாகமாக கையசைத்தபடி, தனக்கே உரிய ஸ்டைலில் சிரித்துக் கொண்டிருந்த சினேகா, கூட்டம் சூழ்ந்துவிட்டதால், வெளியேற முடியாமல் தடுமாறினார்.
வேறுவழியின்றி போலீசார் உதவிக்கு அழைக்கப்பட்டனர். உடனே அவர்கல் லேசான தடியடி நடத்திய பிறகே கூட்டம் கலைந்தது. பின்னர் சினேகா நகைக்கடையைத் திறந்துவைத்துவிட்டு பாதுகாப்பாக கோவை விமான நிலையம் விரைந்தார்.