Don't Miss!
- Sports ஐபிஎல் 2024 - சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பு பாதிப்பு.. புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
“பொன்னியின் செல்வன்“ நான் நடிக்க வேண்டியது.. ஏனோ சரியா வரல..அமலா பால் !
சென்னை : மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் கேட்டார்கள் என்று நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் மற்றும் லைகா புரோடக்சன் நிறுவனம் இணைந்து பிரம்மாண்ட பொருட் செலவில் பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்து வருகின்றனர். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தில் பணிபுரியும் தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்பதை படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இப்படத்தின் பல காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.
இப்படத்தை எடுக்க மக்களின் தலைவர் எம்.ஜி.ஆர் அவரை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி அவரையும் தொடர்ந்து இயக்குநர் நாகா மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் போன்றவர்கள் ஆசைப்பட்டனர். இவர்களை தவிர்த்து இயக்குநர் மணிரத்னம் இதனை எடுத்தே ஆக வேண்டும் என்று இதனை தனது கனவு திரைப்படமாக இயக்க வேண்டும் என்று காத்து கிடந்தார்.
ஆக்ஷன் காட்சியில் வில்லன்களைப் பறக்கவிட்ட சரவணன் அருள்... 200 பேருக்கு பொங்கல் பரிசு தற்போது, அதோ அந்த பறவை போல படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அமலா பால் பேசினார் அப்போது, பொன்னியின் செல்வன் இப்படத்திற்காக தான் ஆடிசன் சென்றதாகவும். அது ஓரு இளவரசி கதாபாத்திரம் என்றும் அந்த கதாபாத்திரம் மிகவும் கூச்ச முடையது என்பதால் அக்கதாப்பாத்திரம் எனக்கு பொருந்தவில்லை. அதனால், யோசித்தேன் இருந்தாலும், நான் விலகி கொள்கின்றேன் என்று சொல்லவில்லை, இயக்குனர் விலகி போ என்று சொல்லவில்லை. இந்த கதாபாத்திரம் பொருந்தாது என்று தெரிந்து இருவரும் வேண்டாம் என்று முடிவு செய்தோம் என்று கூறினார்.
மேலும், வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் நடிக்க முதலில் என்னை அழைத்ததை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. இந்த வாய்ப்பு சரியா வரல கண்டிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு நல்ல படத்தில் மீண்டும் இணைவோம் என்று அமலா பால் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே