Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என் பெயரை கெடுத்துவிட்டார்: சன்னி லியோனிடம் ரூ.100 கோடி கேட்டு கேஸ் போட்ட மாடல் பூஜா மிஸ்ரா
மும்பை: மாடல் பூஜா மிஸ்ரா ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சன்னி லியோன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் பூஜா மிஸ்ரா. டெல்லியில் நட்சத்திர ஹோட்டல் ஊழியரை தாக்கி சர்ச்சையில் சிக்கினார். பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனக்கு சூனியம் செய்துவிட்டதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நடிகை சன்னி லியோன் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமான போட்டியாளர். நான் அந்த போட்டியில் கலந்து கொண்ட பிறகே சன்னி லியோன் கலந்து கொண்டார். சன்னி என் மீது பொறாமைப்பட்டு எனக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார்.
சன்னியால் பொது மக்கள் மத்தியில் என் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. இதனால் நான் என் சேமிப்பை செலவு செய்ய வேண்டியதாகிவிட்டது. எனக்கு ரூ.70 லட்சம் வரை நஷ்டம். என் பெயரை கெடுத்ததற்காக சன்னி எனக்கு ரூ.100 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அந்த மனு நீதிபதி நரேஷ் பாட்டில் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் வழக்கு விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.