twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேலைக்கு மாறிய பூஜா! உள்ளம் கேட்குமே படம்தான் பூஜாவின் முதல் படம். அதில் அட்டகாசமான அழகுடன், மாடர்ன் பெண்ணாக வந்திருப்பார்.தொடர்ந்த வந்த படங்களிலும் அவர் மாடர்ன் பெண்ணாகவே வந்து போனார்.முதல் படத்தைத் தவிர மற்ற எல்லாப் படங்களிலும் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் பூஜா. ஜித்தனில் கவர்ச்சிகதகளியே ஆடியிருப்பார். கவர்ச்சி இல்லாமல் பூஜாவின் படம் இல்லை என்ற நிலையும் உருவானது. அவ்வப்போது (பாடல்காட்சிகளில் மட்டும்) சேலையில் வந்து, ஓ, இது தமிழ்ப் படம் என்ற நினைப்பை ரசிகர்களுக்குக் கொடுத்தார்.கவர்ச்சி காட்ட நான் என்றுமே தயங்க மாட்டேன். டீசன்ட்டான கவர்ச்சியை ரசிகர்கள் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.அந்த மாதிரியான கவர்ச்சிக்கு நான் எப்போதுமே எதிரி அல்ல என்று சுய விளக்கமும் கொடுத்துக் கொண்டார்.ஆனால் முற்றிலும் மாறுபட்ட பூஜாவை ஒரு படத்தில் பார்க்கப் போகிறோம். ஒரு படம் முழுவதும் சேலையிலேயே வரப் போகிறார்பூஜா. இது குறித்து பூஜாவின் வாயைக் கிளறியபோது, நான் கிளாமர் பெண் மட்டுமல்ல, எனக்கு நன்றாக நடிக்கவும் தெரியும்என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் இந்தப் படம் ஏற்படுத்தும்.தகப்பன் சாமி படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நான் வரப் போகிறேன். அதாவது படத்தின் முக்கால்வாசிக் காட்சிகளில்நான் சேலையில்தான் இருப்பேன். காரணம், இதில் நான் கிராமத்துப் பெண்ணாக வருகிறேன். எனவே கிராமத்துப் பெண்கள்போல சேலை கட்டி நடிக்கிறேன்.இந்தப் படம் மூலம் எனது நடிப்புத் திறமையை ரசிகர்கள் உணர்வார்கள். இன்னும் கூடுதலான ரசிகர்கள் கிடைப்பார்கள் என்றார்சந்தோஷமாக.சரி இப்படி நடிப்பதால் உங்களது கிளாமர் ரசிகர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்களா என்று பூஜாவிடம் பதில் கேள்விகேட்டால், அப்படியெல்லாம் நடக்காது. எனது ரசிகர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள். என்னை நல்ல நடிகையாக அவர்கள்பார்ப்பதால் எப்படி நடித்தாலும் பாப்பார்கள். அதனால்தான் இந்த வேடத்தை துணிந்து ஏற்றுள்ளேன் என்கிறார் பூஜா.சேலையில்தான் அதிக கவர்ச்சி காட்ட முடியும் என்பது பூஜாவுக்குத் தெரியுமா?

    By Staff
    |

    உள்ளம் கேட்குமே படம்தான் பூஜாவின் முதல் படம். அதில் அட்டகாசமான அழகுடன், மாடர்ன் பெண்ணாக வந்திருப்பார்.தொடர்ந்த வந்த படங்களிலும் அவர் மாடர்ன் பெண்ணாகவே வந்து போனார்.

    முதல் படத்தைத் தவிர மற்ற எல்லாப் படங்களிலும் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் பூஜா. ஜித்தனில் கவர்ச்சிகதகளியே ஆடியிருப்பார். கவர்ச்சி இல்லாமல் பூஜாவின் படம் இல்லை என்ற நிலையும் உருவானது. அவ்வப்போது (பாடல்காட்சிகளில் மட்டும்) சேலையில் வந்து, ஓ, இது தமிழ்ப் படம் என்ற நினைப்பை ரசிகர்களுக்குக் கொடுத்தார்.


    கவர்ச்சி காட்ட நான் என்றுமே தயங்க மாட்டேன். டீசன்ட்டான கவர்ச்சியை ரசிகர்கள் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.அந்த மாதிரியான கவர்ச்சிக்கு நான் எப்போதுமே எதிரி அல்ல என்று சுய விளக்கமும் கொடுத்துக் கொண்டார்.

    ஆனால் முற்றிலும் மாறுபட்ட பூஜாவை ஒரு படத்தில் பார்க்கப் போகிறோம். ஒரு படம் முழுவதும் சேலையிலேயே வரப் போகிறார்பூஜா. இது குறித்து பூஜாவின் வாயைக் கிளறியபோது, நான் கிளாமர் பெண் மட்டுமல்ல, எனக்கு நன்றாக நடிக்கவும் தெரியும்என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் இந்தப் படம் ஏற்படுத்தும்.

    தகப்பன் சாமி படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நான் வரப் போகிறேன். அதாவது படத்தின் முக்கால்வாசிக் காட்சிகளில்நான் சேலையில்தான் இருப்பேன். காரணம், இதில் நான் கிராமத்துப் பெண்ணாக வருகிறேன். எனவே கிராமத்துப் பெண்கள்போல சேலை கட்டி நடிக்கிறேன்.


    இந்தப் படம் மூலம் எனது நடிப்புத் திறமையை ரசிகர்கள் உணர்வார்கள். இன்னும் கூடுதலான ரசிகர்கள் கிடைப்பார்கள் என்றார்சந்தோஷமாக.

    சரி இப்படி நடிப்பதால் உங்களது கிளாமர் ரசிகர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்களா என்று பூஜாவிடம் பதில் கேள்விகேட்டால், அப்படியெல்லாம் நடக்காது. எனது ரசிகர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள். என்னை நல்ல நடிகையாக அவர்கள்பார்ப்பதால் எப்படி நடித்தாலும் பாப்பார்கள். அதனால்தான் இந்த வேடத்தை துணிந்து ஏற்றுள்ளேன் என்கிறார் பூஜா.

    சேலையில்தான் அதிக கவர்ச்சி காட்ட முடியும் என்பது பூஜாவுக்குத் தெரியுமா?

      Read more about: pooja changes her image
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X