Don't Miss!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- News பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை! சென்னை ஹைகோர்ட் அதிரடி! சரணடைகிறாரா ராஜேஷ் தாஸ்?
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகை பூர்ணாவிடம் திருமணம் செய்வதாகப் பழகி, பணம் பறிக்க முயன்ற வழக்கு.. 3 பேருக்கு ஜாமின்!
கொச்சி: நடிகை பூர்ணாவிடம் மோசடி செய்ய முயன்ற வழக்கில் மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
Recommended Video
தமிழில், வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன், சவரக்கத்தி உட்பட பல படங்களில் உட்பட சில படங்களில் நடித்தவர் பூர்ணா.
இவர் மலையாளத்தில், ஷாம்னா காசிம் என்ற தனது ஒரிஜினல் பெயரில் நடித்து வருகிறார்.
'இந்த உலகத்திலேயே சிறந்த வில்லன் அவர்தான்..' ஸ்பீல்பெர்க் புகழ்ந்த ரஜினி பட வில்லன் இவர்தான்!
நடிகை பூர்ணா வீடு
இவரிடம் கடந்த மாதம், ரபீக் என்பவர் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். பின்னர் ரபீக்கும் பூர்ணா வீட்டினரும் பழகி உள்ளனர். இதற்கிடையே, கடந்த மாதம் 3 ஆம் தேதி பூர்ணாவின் வீட்டுக்கு ரபீக் உட்பட 6 பேர் சென்றுள்ளனர். திருமணம் பற்றி பேசியுள்ளனர். ஆனால் அவர்களைப் பற்றிய தகவலை முழுமையாகக் கூறவில்லை.
ஒரு லட்சம் ரூபாய்
பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன், பூர்ணாவின் குடும்பத்தினரிடம் பேசிய அந்த கும்பலை சேர்ந்தவர்கள், ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். இதனால் பூர்ணா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டனர். ஒரு கட்டத்தில் மிரட்ட ஆரம்பித்தனர். இதையடுத்து பூர்ணாவின் அம்மா போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், அபுபக்கர், ஹாரிஸ் உட்பட சிலரை கைது செய்தனர்.
பல பெண்கள் புகார்
நடிகையிடம் திருமணம் செய்வதாகப் பழகி மோசடிக்கு முயன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியானதும் மேலும் பல பெண்கள் இந்த கும்பல் மீது புகார் கூறியது. இந்தக் கும்பலிடம் நகைகள், பணத்தைப் பலர் இழந்துள்ளனர். சில பெண்களிடம் பாலியல் அத்துமீறலிலும் இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது.
செசன்ஸ் கோர்ட்
இதுதொடர்பாக சினிமா நடிகர் தர்மராஜன், தயாரிப்பாளர் ஒருவர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரத், அபுபக்கர், ஹாரிஸ் ஆகியோருக்கு எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் விசாரணை அதிகாரியின் முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.