Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகை பூர்ணாவிடம் திருமணம் செய்வதாகப் பழகி, பணம் பறிக்க முயன்ற வழக்கு.. 3 பேருக்கு ஜாமின்!
கொச்சி: நடிகை பூர்ணாவிடம் மோசடி செய்ய முயன்ற வழக்கில் மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
Recommended Video
தமிழில், வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன், சவரக்கத்தி உட்பட பல படங்களில் உட்பட சில படங்களில் நடித்தவர் பூர்ணா.
இவர் மலையாளத்தில், ஷாம்னா காசிம் என்ற தனது ஒரிஜினல் பெயரில் நடித்து வருகிறார்.
'இந்த உலகத்திலேயே சிறந்த வில்லன் அவர்தான்..' ஸ்பீல்பெர்க் புகழ்ந்த ரஜினி பட வில்லன் இவர்தான்!
நடிகை பூர்ணா வீடு
இவரிடம் கடந்த மாதம், ரபீக் என்பவர் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். பின்னர் ரபீக்கும் பூர்ணா வீட்டினரும் பழகி உள்ளனர். இதற்கிடையே, கடந்த மாதம் 3 ஆம் தேதி பூர்ணாவின் வீட்டுக்கு ரபீக் உட்பட 6 பேர் சென்றுள்ளனர். திருமணம் பற்றி பேசியுள்ளனர். ஆனால் அவர்களைப் பற்றிய தகவலை முழுமையாகக் கூறவில்லை.
ஒரு லட்சம் ரூபாய்
பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன், பூர்ணாவின் குடும்பத்தினரிடம் பேசிய அந்த கும்பலை சேர்ந்தவர்கள், ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். இதனால் பூர்ணா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டனர். ஒரு கட்டத்தில் மிரட்ட ஆரம்பித்தனர். இதையடுத்து பூர்ணாவின் அம்மா போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், அபுபக்கர், ஹாரிஸ் உட்பட சிலரை கைது செய்தனர்.
பல பெண்கள் புகார்
நடிகையிடம் திருமணம் செய்வதாகப் பழகி மோசடிக்கு முயன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியானதும் மேலும் பல பெண்கள் இந்த கும்பல் மீது புகார் கூறியது. இந்தக் கும்பலிடம் நகைகள், பணத்தைப் பலர் இழந்துள்ளனர். சில பெண்களிடம் பாலியல் அத்துமீறலிலும் இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது.
செசன்ஸ் கோர்ட்
இதுதொடர்பாக சினிமா நடிகர் தர்மராஜன், தயாரிப்பாளர் ஒருவர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரத், அபுபக்கர், ஹாரிஸ் ஆகியோருக்கு எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் விசாரணை அதிகாரியின் முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
சீக்கிரமே திருமணம் ஆகப்போகுது.. திடீரென தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார்.. எங்கே போயிருக்காரு பாருங்க!