இந்த காதலரையும் பிரிந்துவிட்டாராம் 'அந்த' பிரபல டிவி நடிகை
மும்பை: இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் கரிஷ்மா தன்னா தனது காதலரிடம் இருந்து பிரிந்துவிட்டாராம்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் கரிஷ்மா தன்னா. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகர் உபேன் பட்டேலை காதலித்தார்.

அவர்களின் காதல் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு கடந்த ஆண்டு பிரிந்துவிட்டனர். உபேன் பட்டேலை பிரிந்த பிறகு கரிஷ்மா மாடலும், டிவி நடிகருமான பேர்ல் வி புரியை காதலித்தார்.
இந்நிலையில் கரிஷ்மா புரியையும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. நாகர்ஜுன்- ஏக் யோத்தா தொடரில் நடித்தபோது கரிஷ்மாவுக்கும், புரிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.
உபேன் பட்டேலை பிரிந்த வேகத்தில் புரியை காதலித்தார் கரிஷ்மா. தற்போது அவரையும் பிரிந்துவிட்டது பற்றி தான் இந்தி டிவி சீரியல் கலைஞர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











