மாமியார் வீட்ல செம ஜாலி! - ஜெனிலியா உற்சாகம்

ஆனால், கேரியர் முக்கியம் என்பதால் கொஞ்ச நாள் ஜாலிக்குப் பின் நடிக்க வந்துவிட்டாராம்.
இப்போது புதிதாக ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "திருமணத்துக்கு பின் சந்தோஷமாக இருக்கிறேன். என் கணவர் என்னை அருமையாகப் பார்த்துக் கொள்கிறார். அவருக்கு என்னைப் பற்றி எல்லாமே தெரியும். அதனால் என் மனம் புரிந்து நடக்கிறார். என் கணவர் வீட்டினர் காட்டும் அன்பு அற்புதமானது.
இதனால் மாமியார் வீடு எனக்கு சொர்க்கமாக தெரிகிறது. நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.
திருமணமான பெண்கள் கணவர் மனம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும். நான் என் கணவருக்காகவே ஹேர்ஸ்டைலை மறந்து விட்டேன். ஜடை போடாமல் முடியை அப்படியே விட்டாலும் கூட அழகாக இருக்க வேண்டும் என்று ரிதேஷ் விரும்புகிறார். இதனால் முடியை கட்பண்ணி விட்டேன். இதுவரை எனக்காக வாழ்ந்தேன். இனிமேல் என் கணவருக்காக வாழ்வேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











