Don't Miss!
- News கடலூரில் திமுக மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு.. போலீஸ் குவிப்பு
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'பிரபு தேவாண்ணா....' - 'தங்கச்சி' ஹன்ஸிகா!!
பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்தார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. அப்போதுதான் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.
ஹன்சிகா நடிப்பை பொது நிகழ்ச்சிகளில் பிரபுதேவா வெகுவாக புகழ்ந்தார். அதுபோல் ஹன்சிகாவும் பிரபுதேவா திறமையான இயக்குனர் என பாராட்டினார். படம் முடிந்த பிறகும் அவர்கள் தொடர்பு நீடித்ததாக கூறப்பட்டது. இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசுவதாகவும் செய்தி பரவியது.
ஹைதராபாத் ஓட்டலில் ஹன்ஸிகாவின் பிறந்த நாளை விடிய விடிய பிரபு தேவா கொண்டாடியதாகவும், விஷயம் கேள்விப்பட்டு நேராக ஓட்டலுக்குப் போய் ஹன்ஸிகாவுக்கு நயன் பளார் விட்டதாகவும் கூட செய்திகள் வந்தன.
இந்த நிலையில், நயன்தாரா - பிரபு தேவா பிரிந்ததற்கு தான் காரணமில்லை என்று ஹன்ஸிகா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "பிரபுதேவாவுடன் என்னை இணைத்து பேசுவது வேதனை அளிக்கிறது. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி. அண்ணனையும் சகோதரியையும் இணைத்து பேசுவது தப்பில்லையா... தயவுசெய்து என்னைப் பற்றி இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். என்னைப் பொறுத்தவரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் தலையிடமாட்டேன்," என்றார்.