'பிரபு தேவாண்ணா....' - 'தங்கச்சி' ஹன்ஸிகா!!
பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்தார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. அப்போதுதான் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.
ஹன்சிகா நடிப்பை பொது நிகழ்ச்சிகளில் பிரபுதேவா வெகுவாக புகழ்ந்தார். அதுபோல் ஹன்சிகாவும் பிரபுதேவா திறமையான இயக்குனர் என பாராட்டினார். படம் முடிந்த பிறகும் அவர்கள் தொடர்பு நீடித்ததாக கூறப்பட்டது. இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசுவதாகவும் செய்தி பரவியது.
ஹைதராபாத் ஓட்டலில் ஹன்ஸிகாவின் பிறந்த நாளை விடிய விடிய பிரபு தேவா கொண்டாடியதாகவும், விஷயம் கேள்விப்பட்டு நேராக ஓட்டலுக்குப் போய் ஹன்ஸிகாவுக்கு நயன் பளார் விட்டதாகவும் கூட செய்திகள் வந்தன.
இந்த நிலையில், நயன்தாரா - பிரபு தேவா பிரிந்ததற்கு தான் காரணமில்லை என்று ஹன்ஸிகா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "பிரபுதேவாவுடன் என்னை இணைத்து பேசுவது வேதனை அளிக்கிறது. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி. அண்ணனையும் சகோதரியையும் இணைத்து பேசுவது தப்பில்லையா... தயவுசெய்து என்னைப் பற்றி இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். என்னைப் பொறுத்தவரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் தலையிடமாட்டேன்," என்றார்.


Click it and Unblock the Notifications












