ஹீரோயின்
கடல் பூக்களில் அறிமுகமானவர் பிரதியுக்ஷா. ஆனால் அந்தப் படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் மனு நீதி என்ற படத்தில் முரளியுடன் ஜோடி சேர்ந்துநடித்தார் (முரளியின் ரெகமன்டேஷன் பலமாக இருந்ததாம்!).
மனு நீதி பிரதியுக்ஷாவுக்கு சரியான நீதியைக் காட்டாமல் போனதால், பிரபுவுடன் சேர்ந்து சூப்பர் குடும்பம் படத்தில் நடித்தார். கவர்ச்சி சொட்ட சொட்டகதாகலாட்சேபம் நடத்தியும் கதையாகாததால், நொந்து போனார்.
தமிழ் ரசிகர்களை என்ன செய்தால், நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்று யோசித்துப் பார்த்த பிரதி குண்டக்க மண்டக்க சில முடிவுகளை எடுத்தார். அதன்படிஇப்போது தன்னை நாடி வரும் தயாரிப்பாளர்களை, நன்றாக கவனித்து, சந்தோஷமாக அனுப்பி வைக்கிறாராம். அவர்களும் திருப்திகரமாக தங்களது படங்களில்பிரதியை புக் செய்து விடுகிறார்களாம்.
இப்ப நெறய படங்களில் பிரதி காணப்படுகிறார். ராமராஜனோடு கூட ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


Click it and Unblock the Notifications











