Don't Miss!
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இப்படியா பண்ணுவாங்க? அவங்க லெவலுக்குலாம் நான் கீழ இறங்க விரும்பலை... 'பிசாசு' ஹீரோயின் விர்ர்ர்
சென்னை: அதிக சுதந்திரம் எடுத்துக் கொண்டு ஒருவரை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிப்பது மோசமானது என்று நடிகை பிரயாகா மார்டின் தெரிவித்துள்ளார்.
தமிழில், மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் நடித்தவர் பிரயாகா மார்ட்டின். இந்தப் படத்துக்குப் பிறகு சில படங்களுக்கு அவர் பேசப்பட்டார். ஆனால், தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மலையாளத்தில் மோகன்லாலில் சாகர் அலைஸ் ஜாக்கி ரீலோடட், உஸ்தாத் ஓட்டல், ஒரு முறை வந்து பார்த்தாயா, ராம்லீலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடுமையானவை
கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளங்களில் சினிமாவையும் நடிகர், நடிகைகளையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தப் போக்கு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால், டிசாஸ்டர் என்றும் குப்பை என்றும் கூறிவருகின்றனர். 'விமர்சனங்களை ஏற்கிறோம், ஆனால் இதுபோன்ற வார்த்தைகள் கடுமையானவை' என்று நடிகர், நடிகைகள் கூறி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள்
இருந்தும் இதுபோன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. பிரபல முன்னணி நடிகர், நடிகைகளும் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றனர். ஏதாவது சின்ன காரணம் கிடைத்தாலும் அதை வைத்து, சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்வது அதிகரித்து வருகிறது. இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
டிசாஸ்டர்
இந்நிலையில் இதில் 'பிசாசு' நடிகை பிரயாகாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, டிசாஸ்டர் என்ற வார்த்தையை வெறுக்கிறேன் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, 'குறிப்பாக என்னை பற்றிய டிரோல்களில் பலர் இந்த வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பலர் எதிர்மறையான கருத்துக்களை மற்றவர்கள் மீது வைக்கின்றனர்.
பாதிக்கப்பட்டிருக்கிறேன்
இதுபோன்று அவமானப்படுத்தும் விதமாக யாரையும் நாம் பேசுவதில்லை. அதிக சுதந்திரம் எடுத்துக் கொண்டு ஒருவரை இப்படி கடுமையாக விமர்சிப்பது மோசமானது. தனிப்பட்ட முறையில் நானும் ட்ரோல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னை கடுமையாக விமர்சிப்பவர்களின் தரத்துக்கு நானும் இறங்க விரும்பவில்லை என்பதால் ட்ரோல்களை நான் புறக்கணிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கன்னடத்திலும்
இவர் இப்போது நடித்துள்ள பூமியிலே மனோஹரா ஸ்வகர்யம் என்ற மலையாளப் படம் அடுத்து வெளிவர இருக்கிறது. சைஜூ அந்திக்காடு இயக்கியுள்ள இதில் தீபக் பரம்போல் ஹீரோவாக நடித்துள்ளார். மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வரும் பிரயாகா, சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தமிழிலும் நடிக்க இருக்கிறார்.