twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கவர்ச்சிக்கு ஆசைப்படும் 'காரைக்குடி' ப்ரீத்திகா ராவ்!

    By Sudha
    |

    சிக்கு புக்கு நாயகி ப்ரீத்திகா ராவ் கவர்ச்சிகரமாக நடிக்க ஆசைப்படுகிறாராம்.

    சிக்கு புக்கு படத்தில் தந்தை ஆர்யாவின் ஜோடியாக வந்து போனவர் ப்ரீத்திகா ராவ். முன்னாள் பத்திரிக்கையாளரான இவர் இப்போது எந்தப் படத்திலும் காணவில்லை. மும்பையில் பிறந்து வளர்ந்தவரான இவர் புதுப் படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் உள்ளார். அவருக்கேற்ற படம் வராததுதான் இதற்குக் காரணமாம்.

    இருந்தாலும் தற்போது தெலுங்குப் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு பீரியட் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் மாடர்னாகவும் அதேசமயம் கவர்ச்சிகரமாகவும் நடித்து வருகிறாராம்.

    முதல் படத்தில் காரைக்குடியைச் சேர்ந்த அச்சு அசல் தமிழ்ப் பெண்ணாக நடித்தீர்கள், இப்போது அஜால்குஜாலாக கவர்ச்சிக்குத் தாவி விட்டீர்களே என்று கேட்டால், எனக்கு மாடர்ன் உடை பொருத்தமாக இருக்கும் என பீரியட் படத்தில் ஒப்பந்தமாகி நடிக்கும் வரை உணரவில்லை. ஆனால் இப்போது எல்லோரும் என்னைப் பார்த்து பிரமிக்கின்றனர். கவர்ச்சிகரமாக இருப்பதாகவும் சிலாகிக்கின்றனர்.

    எனக்கும் கூட மாடர்னாக, முகம் சுளிக்காத வகையிலான கவர்ச்சி வேடத்தில் நடிக்க ஆசைதான். எனவே இனிமேல் கிராமத்துப் பெண்ணாக நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறேன் என்றார் ப்ரீத்திகா.

    English summary
    Actress Preetika Rao is willing to go glamour in her forthcoming pictures. She has acted with Arya in Chikku Bukku. Now she is concentrating in Telugu and acting in a movie named Period.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X