Don't Miss!
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திருமண போட்டோக்களை ஏலத்தில் விடும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா: எதற்கு தெரியுமா?
மும்பை: பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஏலத்தில் விட உள்ளாராம்.
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட்இனப் என்பவரை காதலிப்பதாகவும், இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதை பார்த்த ப்ரீத்திக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்தது.
எனக்கு ஒன்றும் தற்போது திருமணம் இல்லை, அதை நான் முடிவு செய்து கொள்கிறேன் என்று சீறினார்.
ரகசிய திருமணம்
ப்ரித்தி தனது காதலர் ஜீனை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் குடும்பத்தார், மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
புகைப்படம்
ப்ரீத்தியின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. திருமணப் பந்தல் புகைப்படம் மட்டுமே வெளியானது.
ஏலம்
ப்ரீத்தி தனது திருமண புகைப்படங்களை ஏலத்தில் விட உள்ளாராம். ஏலத்தில் கிடைக்கும் பணத்தை ப்ரீத்தி ஜிந்தா பவுன்டேஷன் மூலம் நல்ல காரியத்திற்காக செலவு செய்ய உள்ளாராம்.
அம்மா
ப்ரீத்திக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் அவர் உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று அவரது அம்மா அடம்பிடித்துள்ளார். அம்மாவுக்காகவே ப்ரீத்தி திருமணம் செய்துள்ளாராம்.