காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை..வெளிநாடே கதியா இருக்கீங்களே..இந்தியா வர மனசே இல்லையா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் தனது காதலருடன் வெளிநாடே கதி என இருப்பதால் அவரது ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
Recommended Video
தமிழில் சினிமாவின் மோஸ்ட் வான்டட் நாயகி ஆகியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.
தற்போது இவர், ருத்ரன், பத்து தல, அகிலன், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளது.

பிரியா பவானி சங்கர்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பல படங்களில்
பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் குருதி ஆட்டம், யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. இதில் திருச்சிற்றம்பலம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

காதலர் ராஜவேலுவுடன்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். ராஜ் வேல் எனும் நபரை ப்ரியா பவானி சங்கர் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.

காதலருடன் வெளிநாட்டில்
இந்நிலையில், தனது காதலருடன் வெளிநாட்டுக்கு டூர் சென்ற பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக காதலருடன் ஊர் ஊராக சுற்றி வருகிறார். தற்போது இவர் ஜெர்மனியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் காதலருடன் வெளிநாடே கதியா இருக்கீங்களே..இந்தியா வர மனசே இல்லையா? என்று கலாய்த்தும் வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











