Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பருத்திவீரன் கிடைச்சாச்சு: 2016ல் முத்தழகுக்கு திருமணங்கோ!
சென்னை: 2016ம் ஆண்டு தனது காதலர் முஸ்தபா ராஜை திருமணம் செய்யப் போவதாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியாமணி மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜை காதலித்து வருகிறார். இத்தனை நாட்களாக காதலர் பக்றி கேட்டால் நழுவிக் கொண்டிருந்த அவர் தற்போது முஸ்தபாவை பற்றி ட்வீட் செய்யும் அளவுக்கு ஆகிவிட்டார்.
இந்நிலையில் காதல் மற்றும் திருமணம் பற்றி பிரியாமணி கூறுகையில்,
சிசிஎல்
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிசிஎல் போட்டிகளின் போது தான் நான் முஸ்தபாவை முதல் முறையாக சந்தித்தேன். இரண்டாவது சந்திப்பின்போது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம்.
எதிர் எதிர்
நானும் முஸ்தபாவும் குணத்தில் எதிர் எதிரானவர்கள். ஒரு வேளை அது தான் எங்களை ஒன்று சேர்த்தது என்று நினைக்கிறேன்.
காதல்
நான் தான் முதலில் காதலை சொன்னேன். எஸ்.எம்.எஸ். மூலம் காதலை சொன்னேன். அவர் அதை ஜோக் என நினைத்தார். இரண்டு மாதங்கள் கழித்து தான் நான் சீரியஸாக கூறியதை புரிந்து கொண்டார்.
திருமணம்
2016ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். ஆனால் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.
படம்
திருமணத்திற்கு பிறகும் வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன். திருமணத்திற்கு பிறகு நான் மும்பையில் தங்கி இருப்பேன். பட வாய்ப்புகளை பொறுத்து தான் நான் எங்கு தங்குவது என்பதை முடிவு செய்வேன் என்றார் பிரியாமணி.