twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பின்னி எடுக்கும் ப்ரியா! ப்ரியாமணி நடிப்பிலும், கிளாமலும் பின்னி எடுத்திருக்கும் மது படுபோதையுடன்உருவாகி வருகிறது.தென்னரசுவின் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ், ப்ரியா மணி நடிப்பில் உருவாகி வரும்படம்தான் மது. மது படப்பிடிப்பின் இடையே திடீரென ரமேஷுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதால் இடையில் சிறிது நாட்கள் அவர் சம்பந்தப்படாத காட்சிகளை சுட்டுவந்தார்கள்.தேனிலவு முடிந்து ரமேஷ் திரும்பி விட்டதால் இப்போது அவரும், ப்ரியாமணியும்நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். படத்தோட கதை என்னண்ணே என்றுதென்னரசுவை கிண்டினோம்.காதலா, மதமா என்பதுதான் படத்தோட ஒரு வரி. இதை வைத்துத்தான் இந்தக்கதையை பின்னியுள்ளோம். ப்ரியாமணிக்கு இந்தப் படம் பெரிய பிரேக்காகஇருக்கும்.எப்போதும் கடவுளின் சிந்தனையில் இருக்கும் ஒரு பெண்ணுக்குள் காதல் விதையைதூவுகிறார் ஹீரோ.இதில் ப்ரியாமணி கிளாமர் மட்டும் காட்டாமல் நன்றாக நடிக்கவும் செய்துள்ளார்என்றார்.அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போதே லேசாக ப்ரியாமணி, ரமேஷ் நடித்துக்கொண்டிருந்த காட்சியை நோட்டம் விட்டோம்.ரமேஷ் முன்பு நின்று கொண்டிருந்த ப்ரியாமணி, என்னோட உடம்புதானே உனக்குவேண்டும், இந்தா எடுத்துக்கோ என்று கோபமாக கூறியபடி முந்தானையைபட்டென்று கழற்றி விட்டு கண்ணை மூடிக் கொண்டார்.ப்ரியாவையே வெறிச்சிட்டபடி ரமேஷ் நின்றார். (நாமும் தான்). காட்சி ஓ.கே.இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான காட்சிகள் படம் முழுக்க நிறைய இருக்கிறதாம்.இப்படத்தின் இன்னொரு விசேஷம், இசைஞானி இளையராஜா. பின்னணிஇசையோடு அட்டகாசமான ஒரு பாடலையும் ராஜா பாடியுள்ளார்.நல்ல படம், நல்ல கதை, நல்ல கலைஞர்கள், எனவே திருட்டு விசிடியில் படத்தைப்பார்க்காமல் தியேட்டருக்குப் போய் பார்த்து என்னை மாதிரியான இயக்குனர்களுக்குஒளி கொடுங்கள் ரசிகர்களே என வேண்டுகோள் விடுத்தபடி, அடுத்த காட்சியை சுடபோய் விட்டார் தென்னரசு.தென்னரசு போகட்டும், ப்ரியாவிடம் வருவோம். இந்தப் படத்தில் நன்றாகநடித்திருக்கும் ப்ரியாமணி முன்பை விட அதிகமாக கிளாமரிலும் புகுந்துவிளையாடியிருக்கிறாராம்.இப்போது சற்று கூடுதல் பொலிவோடு காணப்படும் ப்ரியாமணி, சூர்யாவின் அண்ணன்கார்த்திக்குடன் பருத்தி வீரன், ஜீவாவுக்கு ஜோடியாக தோட்டா ஆகிய மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.சமீபத்தில் ஒரு படத்தில் நடிக்க ப்ரியாமணிக்கு போன் போட்டார் தயாரிப்பாளர். இதையடுத்து ஒரு சம்பளத்தைச்சொன்னார் ப்ரியாமணி. உடனே போனை வைத்துவிட்டார் தயாரிப்பாளர்.இதைத் தொடர்ந்து அவருக்கு தானே போன் செய்த ப்ரியாமணி முதலில் கேட்டதில் பாதி குடுத்தா போதும் சார்என்று பேரம் பேச, ஸாரிம்மா.. நான் நயனதாராவை புக் பண்ணிட்டேன் என்று கூறிவிட்டாராம்.நொந்து போய்விட்டாராம் ப்ரியாமணி.

    By Staff
    |

    ப்ரியாமணி நடிப்பிலும், கிளாமலும் பின்னி எடுத்திருக்கும் மது படுபோதையுடன்உருவாகி வருகிறது.

    தென்னரசுவின் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ், ப்ரியா மணி நடிப்பில் உருவாகி வரும்படம்தான் மது. மது படப்பிடிப்பின் இடையே திடீரென ரமேஷுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதால் இடையில் சிறிது நாட்கள் அவர் சம்பந்தப்படாத காட்சிகளை சுட்டுவந்தார்கள்.

    தேனிலவு முடிந்து ரமேஷ் திரும்பி விட்டதால் இப்போது அவரும், ப்ரியாமணியும்நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். படத்தோட கதை என்னண்ணே என்றுதென்னரசுவை கிண்டினோம்.

    காதலா, மதமா என்பதுதான் படத்தோட ஒரு வரி. இதை வைத்துத்தான் இந்தக்கதையை பின்னியுள்ளோம். ப்ரியாமணிக்கு இந்தப் படம் பெரிய பிரேக்காகஇருக்கும்.


    எப்போதும் கடவுளின் சிந்தனையில் இருக்கும் ஒரு பெண்ணுக்குள் காதல் விதையைதூவுகிறார் ஹீரோ.

    இதில் ப்ரியாமணி கிளாமர் மட்டும் காட்டாமல் நன்றாக நடிக்கவும் செய்துள்ளார்என்றார்.

    அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போதே லேசாக ப்ரியாமணி, ரமேஷ் நடித்துக்கொண்டிருந்த காட்சியை நோட்டம் விட்டோம்.

    ரமேஷ் முன்பு நின்று கொண்டிருந்த ப்ரியாமணி, என்னோட உடம்புதானே உனக்குவேண்டும், இந்தா எடுத்துக்கோ என்று கோபமாக கூறியபடி முந்தானையைபட்டென்று கழற்றி விட்டு கண்ணை மூடிக் கொண்டார்.


    ப்ரியாவையே வெறிச்சிட்டபடி ரமேஷ் நின்றார். (நாமும் தான்). காட்சி ஓ.கே.இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான காட்சிகள் படம் முழுக்க நிறைய இருக்கிறதாம்.

    இப்படத்தின் இன்னொரு விசேஷம், இசைஞானி இளையராஜா. பின்னணிஇசையோடு அட்டகாசமான ஒரு பாடலையும் ராஜா பாடியுள்ளார்.

    நல்ல படம், நல்ல கதை, நல்ல கலைஞர்கள், எனவே திருட்டு விசிடியில் படத்தைப்பார்க்காமல் தியேட்டருக்குப் போய் பார்த்து என்னை மாதிரியான இயக்குனர்களுக்குஒளி கொடுங்கள் ரசிகர்களே என வேண்டுகோள் விடுத்தபடி, அடுத்த காட்சியை சுடபோய் விட்டார் தென்னரசு.

    தென்னரசு போகட்டும், ப்ரியாவிடம் வருவோம். இந்தப் படத்தில் நன்றாகநடித்திருக்கும் ப்ரியாமணி முன்பை விட அதிகமாக கிளாமரிலும் புகுந்துவிளையாடியிருக்கிறாராம்.


    இப்போது சற்று கூடுதல் பொலிவோடு காணப்படும் ப்ரியாமணி, சூர்யாவின் அண்ணன்கார்த்திக்குடன் பருத்தி வீரன், ஜீவாவுக்கு ஜோடியாக தோட்டா ஆகிய மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

    சமீபத்தில் ஒரு படத்தில் நடிக்க ப்ரியாமணிக்கு போன் போட்டார் தயாரிப்பாளர். இதையடுத்து ஒரு சம்பளத்தைச்சொன்னார் ப்ரியாமணி. உடனே போனை வைத்துவிட்டார் தயாரிப்பாளர்.

    இதைத் தொடர்ந்து அவருக்கு தானே போன் செய்த ப்ரியாமணி முதலில் கேட்டதில் பாதி குடுத்தா போதும் சார்என்று பேரம் பேச, ஸாரிம்மா.. நான் நயனதாராவை புக் பண்ணிட்டேன் என்று கூறிவிட்டாராம்.

    நொந்து போய்விட்டாராம் ப்ரியாமணி.

      Read more about: priyamanis madhu
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X