நீச்சலுடை நழுவியதா...?-ப்ரியாமணி மகா கடுப்பு

கடந்த சில தினங்களாக இணையத்தளங்களில் பிரியாமணியின் நிர்வாண கோல படங்கள் என்று சொல்லி சிலவற்றை பிரசுரித்து வருகிறார்கள்.
துரோணா என்ற தெலுங்குப் படத்தில் கிட்டத்தட்ட முற்றும் துறந்த நீச்சலுடைக் காட்சியில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது, அவரது நீச்சலுடை தண்ணீரில் நழுவிவிட்டதாகவும், அதைக் கவனித்துவிட்ட படப்பிடிப்புக் குழுவினர் அவருக்கு உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த சின்ன கேப்பைப் பயன்படுத்திக் கொண்ட சில குறும்புக்காரர்கள், ப்ரியாமணி ஆடை நழுவிய கோலத்தில் இருக்கும் காட்சியை வீடியோவாகவும், ஸ்டில்களாகவும் செல்போனில் சுட்டு இணையத்தில் பரப்பி விட்டார்களாம்.
இதுபற்றி பிரியாமணியிடம் விளக்கம் (??!!) கேட்டுள்ளனர் சில நிருபர்கள்.
செம கடுப்பாகிவிட்ட ப்ரியாமணி, "இதெல்லாம் சும்மா... யாரோ வேலையற்றவர்கள் செய்யும் வேண்டாத செயல் இது. நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை.
சரி... அப்படியே நடந்ததாக இருக்கட்டும். இவர்களுக்கு அதில் என்ன அவ்வளவு அக்கறை? என் நடிப்பைப் பாருங்கள், விமர்சனம் பண்ணுங்கள். அது என் வளர்ச்சிக்கு உதவும். இப்படியெல்லாம் அசிங்கப்படுத்துவதில் இவர்களுக்கெல்லாம் அப்படி என்னதான் திருப்தியோ.. நான் நீச்சல் குளத்துக்குள் இருந்தபோது பிகினி இருந்ததா இல்லையா என்று இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்" என்றார் படு சூடாக.


Click it and Unblock the Notifications











