Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புலிகளோடு பிரியாமணி... பேஸ்புக் படங்களால் பரபரப்பு
சென்னை: புத்தாண்டைக் குடும்பத்தினரோடு கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றுள்ள நடிகை பிரியாமணி, அங்குள்ள புலிக் கோவிலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளன.
பாரதிராஜாவின் 'கண்களால் கைது செய்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அமீரின் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படம் மூலம் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தார்.
இந்நிலையில் குடும்பத்தினரோடு புத்தாண்டக் கொண்டாட பாங்காக் சென்றுள்ளார் பிரியாமணி. அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
முத்தழகி....
சமீபத்தில் ஷாரூக்கின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து, அஞ்சாதசண்டி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
புத்தாண்டுக் கொண்டாட்டம்...
தற்போது, இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ள புத்தாண்டைக் கொண்டாட குடும்பத்தாருடன் பாங்காக் சென்றுள்ளார் பிரியாமணி. அங்குள்ள புலிகள் கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு சென்றாராம் பிரியாமணி.
போட்டோ....
பொதுவாகவே பிராணிகள் நலனில் அக்கறைக் கொண்ட பிரியாமணி, அங்கு சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த புலிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
மடி மீது தலை வைத்து...
அதில், ஒரு படத்தில் பிரியாமணியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கிறது ஒரு புலி. மற்றொரு படத்தில் புலியை வருடிக் கொடுத்தவாறு போஸ் தருகிறார் பிரியாமணி.
இந்தியா...
புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடி விட்டு வரும் ஜனவரி 3ல் அவர் இந்தியா திரும்புவார் என எதிர் பார்க்கப் படுகிறது.