Don't Miss!
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- News எல்லா கோட்டையும் அழிங்க..என்னது எனக்கு ஓட்டு இல்லையா? ஷார்ப்பாக வந்து ஷாக் ஆன சூரி! என்னாச்சு?
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் - ப்ரியாமணி
இன்னும் இரு ஆண்டுகளில் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார்.
பருத்தி வீரன் மூலம் பரபரப்பானவர் ப்ரியாமணி. அடுத்து ஓரிரு படங்களில் நடித்த அவர் படிப்படியாக தமிழ் சினிமாவில் காணாமல் போனார்.
சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினார். கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருந்ததாகவும், ஆனால் எதுவும் திருப்தியாக அமையவில்லை என்றும் தெரிவித்த ப்ரியா மணி, இப்போது தனது திருமணம் குறித்து சீரியாக சிந்திக்க ஆரம்பித்துள்ளாராம்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடக்கலாம் .
ஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்," என்றார்.