Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
1920 நடக்கும் கதை.. உண்மை சம்பவப் படத்தில் இப்படியொரு கேரக்டர்ல நடிக்கிறாராமே நம்ம முத்தழகு!
ஐதராபாத்: உண்மைச் சம்பவக் கதையில் இப்படியொரு கேரக்டரில் நடிக்க இருப்பதாக முத்தழகு தெரிவித்திருக்கிறார்.
Recommended Video
பிரபல தெலுங்கு நடிகர் ராணா. இவர் தமிழில், ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
நாட்டில் வெறுப்பை விதைப்பதா? சகோதரிக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகை மீது போலீசில் பரபரப்பு புகார்
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்தனர். இந்தி படங்களில் நடித்துவருகிறார்.
பிரபு சாலமன்
இவர் இப்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ள காடன் படத்தில் நடித்துள்ளார். இதை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மிரட்டியது. யானையுடன் ராணா, விஷ்ணு விஷால் நிற்கும் புகைப்படங்களும் வைரலாயின. இந்த படம் இப்போது ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி
இந்நிலையில் இதையடுத்து 'விரதபர்வம் 1992' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராணா. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். வேணு உடுகுலா இயக்கும் இந்தப் படத்தில் நந்திதா தாஸ், பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
ஸ்பெஷல் பயிற்சி
இதற்கு முன் சில படங்களில் ராணா, போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த படத்துக்காக ஸ்பெஷல் பயிற்சி எடுக்க இருந்தார். ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரிகள் இந்தப் பயிற்சியை அவருக்கு அளிக்க இருந்தனர். கொரோனா காரணமாக, அந்த பயிற்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார் பிரியாமணி.
உண்மை சம்பவம்
இவர் பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர். அவர் கூறும்போது, இது உண்மை சம்பவங்களின் அடிப்படையிலான கதை. 1920 பின்னணியில் உருவாகிறது. எனது கேரக்டர் பற்றியோ, கதை பற்றியோ இப்போது சொல்ல இயலாது. ஆனால், அது முக்கியமான கேரக்டர். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் என்று சொன்னார் பிரியாமணி. இந்நிலையில் பெண் நக்சலைட்டாக அவர் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.