Don't Miss!
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிசியாகும் பிரியங்கா!
வெயில் படத்தில் ஜில்லென்று வந்து போன பிரியங்கா, தமிழில் மெதுவாக பிசியாகி வருகிறார். புதுப் புதுப் படங்கள் தேடி வருவதால்,குஷியாகியிருக்கிறாராம்.
வெயில் படத்தில் பசுபதியின் காதலியாக வந்து அசத்தியவர் பிரியங்கா. முட்டை விழிகள், பளிச் முகம், ஜில் அழகு என சிம்ப்ளி சூப்பர்ப் ஆகஇருப்பவர் பிரியங்கா.முதல் படத்திலேயே பலரையும் கவர்ந்தவர். இதனால் அவரைத் தேடி புதுப் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதாம். ஆரம்பத்தில்பிரியங்காவுக்கு திருப்திகரமான வாய்ப்பு ஏதும் வரவில்லை. பெரிய வாய்ப்பாக வரும் என்று காத்திருந்த அவருக்கு ஆப்புதான் வந்தது!
இதனால் அப்செட் ஆகிப் போன பிரியங்கா வருகிற வாய்ப்புகளையெல்லாம் ஓ.கே. சொல்ல ஆரம்பித்தார். அப்படித்தான் திருத்தம் படத்தில்ஹரிக்குமாருடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். முதலில் இந்த வாய்ப்பை வேண்டாம் என்றார். பின்னர் அவராகவே அப்ரோச் செய்துஹீரோயின் ஆனார்.
இப்போது இன்னொரு புதுப் படவாய்ப்பும் பிரியங்காவைத் தேடி வந்துள்ளது. இயக்குநர் பாசிலிடம் பல படங்களுக்கு துணை இயக்குநராகப்பணியாற்றியுள்ள பன்னீர் செல்வம் முதல் முறையாக ஒரு படத்தை இயக்கப் போகிறார்.
தொல்லைபேசி என்று இப்படத்திற்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார். விசில் நாயகன் விக்ரமாதித்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிபோடுகிறார் பிரியங்கா.
பிரியங்காவுக்கு தொல்லை பேசியில் படு வித்தியாசமான கேரக்டராம். படத்தில் அவரது கேரக்டர் குறித்து பன்னீர் செல்வம் விளக்கியதுமே,கண்டிப்பா நான்தான் சார் நடிப்பேன் என்று கூறி விட்டாராம் பிரியங்கா. அத்தோடு நில்லாமல் பன்னீர் கேட்ட நாட்களுக்குரிய கால்ஷீட்டையும்அள்ளிக் கொடுத்து விட்டாராம்.
பிரியங்காதான் ஹீரோயின் என்றாலும் கூட மும்பையைச் சேர்ந்த திவ்யா, ஆர்த்தி தாகூர் ஆகியோரும் நாயகிகளாக நடிக்கிறார்களாம்.
படப்பிடிப்பு முழுவதும் மூணார், குற்றாலம், ஊட்டி என ஜில்லான இடங்களில் நடைபெறவுள்ளதாம்.
அடுத்தடுத்து பட வாய்ப்பு வருவதால் பிரியங்கா, சந்தோஷ பெண்ணாக மாறியிருக்கிறார். கிடைக்கிற வாய்ப்புகளை விடாமல் சூப்பராக நடித்துதூள் கிளப்புவதே இப்போதைய ஒரே லட்சியம் என்கிறார் பிரியங்கா.
பின்னுங்க, பிரியங்கா!