Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என் இதயமே நொறுங்கிவிட்டது: ஃபீல் பண்ண ப்ரியங்கா சோப்ரா
டெல்லி: தனது இதயமே நொறுங்கிவிட்டதாக பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
பாலிவுட், ஹாலிவுட் என்று அசத்தி வருகிறார் ப்ரியங்கா சோப்ரா. இந்நிலையில் பரேலி சர்வதேச பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது.
அதற்காக ப்ரியங்கா தனது தாயுடன் பரேலிக்கு வந்தும் சிக்கலாகிவிட்டது.
மூடுபனி
மூடுபனி காரணமாக டெல்லியில் இருந்து பரேலிக்கு விமானம் கிளம்ப ரொம்பவே தாமதமானது. இதனால் பல்கலைக்கழகத்திற்கு நேரில் செல்ல முடியாததை நினைத்து இதயம் நொறுங்கிவிட்டதாக ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
ப்ரியங்கா
விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தும் விமானம் கிளம்புவதாக இல்லை. வேறு எப்படியாவது பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியுமா என்று முயன்றும் மூடுபனியால் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் ப்ரியங்கா.
பரேலி
5 ஆண்டுகள் கழித்து என் சொந்த ஊரான பரேலிக்கு கிளம்பினேன். என் பழைய நண்பர்கள், ஊரை பார்க்க வேண்டும் என்ற ஆசையாலும் பரேலிக்கு செல்ல ஆவலாக இருந்தேன் என்கிறார் ப்ரியங்கா.
வாழ்த்துக்கள்
நான் நேரில் வர முடியாததை புரிந்து கொண்ட பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு நன்றி. மேலும் பட்டம் பெற்று புதிய பயணத்தை துவங்குவோருக்கு என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் ப்ரியங்கா.