திருமணமான 4 மாதத்தில் கணவரை பிரியும் நடிகை ப்ரியங்கா சோப்ரா
மும்பை: நடிகை ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் விவாகரத்து பெறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்ற இடத்தில் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்தார். காதல் துவங்கிய வேகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு இருவரும் அடிக்கடி எங்காவது சென்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

ஜோனஸ்
ப்ரியாங்கா நிக்கை விட 10 வயது பெரியவர். வயது வித்திாயசம் பார்க்காமல் திருமணம் செய்த அவர்களுக்கு இடையே தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். வேலை, பார்ட்டி, பணம் என்று எதற்கு எடுத்தாலும் இருவருக்கும் இடையே சண்டை வருகிறதாம்.

திருமணம்
அவசர அவசரமாக காதலித்து அதே அவசரத்தில் திருமணம் செய்தது தவறு என்பதை ப்ரியங்கா, நிக் உணரத் துவங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஒன்றாக சேர்ந்து வாழத் துவங்கிய பிறகே பிரச்சனைகள் ஏற்படத் துவங்கியுள்ளதாம்.

கோபம்
ப்ரியங்கா ரொம்ப கூலானவர், எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்வார் என்று நினைத்தாராம் நிக். ஆனால் ப்ரியங்காவுக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருவது தற்போது தான் அவருக்கு தெரிந்துள்ளதாம்.

பெற்றோர்
ப்ரியங்கா குழந்தைகள் பெற்று சந்தோஷமாக வாழ விரும்பவில்லையாம். 21 வயது பெண் போன்று எப்பொழுதும் ஜாலியாக பார்ட்டி செய்ய விரும்புகிறாராம். ப்ரியங்காவின் குணம் அறிந்த நிக்கின் பெற்றோர் அவரை விட்டு விலகுமாறு கெஞ்சுகிறார்களாம்.

பிரச்சனை
ப்ரியங்காவும், நிக் ஜோனஸும் விவாகரத்து செய்யப் போவதாக கூறப்படுகிறது. ஜோத்பூரில் உள்ள அரண்மனையில் ஊரே வியக்க நடந்த திருமணம் 4 மாதத்தில் விவகாரத்தை நோக்கி சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications











