Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நாங்க ஹேப்பி தம்பதி தாங்கோ... உல்லாச கப்பலில் நியூ இயர் பார்ட்டி கொண்டாடிய பாலிவுட் நாயகி
மும்பை : பாலிவுட்டின் சிறப்பான நடிகையாக உள்ளவர் பிரியங்கா சோப்ரா.
பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தொடர்களில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கணவருடன் பிளவு ஏற்பட்டதாக கூறப்படும் வதந்திகளுக்கு இவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்!
நடிகை பிரியங்கா சோப்ரா
தமிழில் நடிகர் விஜய்யின் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து பாலிவுட்டிற்கு சென்ற இவர், முன்னணி நாயகியாக மாறினார். கடந்த 2018ல் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை மணந்து அமெரிக்காவில் குடியேறினார்.
கணவருடன் கருத்து வேறுபாடு?
தொடர்ந்து பாலிவுட்டிலும் ஹாலிவுட்டில் சில தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதை இருவரும் மறுத்த நிலையில், தனது கணவர் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
விவாகரத்து வதந்திகள்
இந்நிலையில் மீண்டும் விவாகரத்து குறித்த செய்திகள் சமீபத்தில் வெளியாகின. தனது கணவர் நிக் ஜோன்ஸ் பெயரை அவர் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியது இதற்கு காரணமாக கூறப்பட்டது. நிக் ஜோன்சை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் பிரியங்காவிற்கு உள்ளதாக தெரிகிறது.
புத்தாண்டு கொண்டாட்டம்
இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசமும் விவாகரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது புத்தாண்டையொட்டி கப்பலில் இருவரும் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விவாகரத்து தகவல்களுக்கு மீண்டும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா.
Recommended Video
முத்தங்கள் பரிமாற்றம்
தன்னுடைய நண்பர்களுடன் இந்த பார்ட்டி கொண்டாட்டத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். மேலும் இருவரும் முத்தங்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர். விதவிதமான உடைகள் மற்றும் ஸ்விம் சூட்களிலும் இவர்களை இந்த கொண்டாட்டத்தில் காண முடிகிறது. ஆனால் எந்த இடத்தில் இந்தக் கொண்டாட்டம் என்பதை பிரியங்கா வெளிப்படுத்தவில்லை.