Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
புகைப்பிடித்த ப்ரியங்கா சோப்ரா: ஆஸ்துமாவுக்கு மருந்தான்னு விளாசிய ரசிகர்கள்
மும்பை: தனக்கு ஆஸ்துமா உள்ளது என்று கூறிய பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா புகைப்பிடித்ததை பார்த்த ரசிகர்கள் அவரை விளாசியுள்ளனர்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனக்கு ஆஸ்துமா இருப்பதாக தெரிவித்தார். மேலும் தீபாவளி பண்டிகையின்போது யாரும் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.
தீபாவளி என்பது விளக்குகள், லட்டு மற்றும் அன்பை பற்றியது அதனால் பட்டாசு வெடித்து காற்றை மாசுப்படுத்த வேண்டாம் என்றார் அவர்.
ப்ரியங்கா
ப்ரியங்கா சோப்ரா தனது 37வது பிறந்தநாளை கணவர் நிக் ஜோனஸ் மற்றும் குடும்பத்தாருடன் மயாமியில் கொண்டாடினார். ப்ரியங்காவின் பிறந்தநாளை கொண்டாட அவரின் அம்மா மது சோப்ரா, தங்கை பரினீத்தி ஆகியோர் மும்பையில் இருந்து அமெரிக்கா சென்றனர். கொண்டாட்டத்தின்போது ப்ரியங்கா சிகரெட் பிடிக்க, அவரின் கணவரும், அம்மாவும் சுருட்டு பிடித்துள்ளனர். அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
|
சிகரெட்
ப்ரியங்கா சோப்ராவுக்கு ஆஸ்துமா உள்ளது. அவருக்கு புகைப்பிடிப்பவர்களை கண்டாலே பிடிக்காது. புகைப்பிடித்தலுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். அதே சமயம் ப்ரியங்கா சோப்ரா புகைப்பிடிக்கிறார். அது எப்படி என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
|
தீபாவளி
ப்ரியங்கா சோப்ராவுக்கு தீபாவளியின்போது ஏற்பட்ட ஆஸ்துமா சரியாகிவிட்டது. மீண்டும் ஆஸ்துமா ஏற்படவே ப்ரியங்கா சோப்ரா தற்போது புகைப்பிடிக்கிறார். அப்பொழுது தானே தீபாவளியின்போது பட்டாசுகளை வெடித்து மாசு ஏற்படுத்த வேண்டாம் என்று சொல்ல முடியும் என்று கூறி விளாசியுள்ளனர் நெட்டிசன்கள்.
|
ஹாலிவுட்
ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்தபோது யாரும் புகைப்பிடிக்க வேண்டாம் என்றார். ஹாலிவுட் சென்றபிறகு தம்மடிக்கிறார். அது தப்பு இல்லை. ஆஸ்துமாவுக்கு மருந்து சாப்பிடுகிறார் அவ்வளவு தான். ப்ரியங்கா படங்களில் மட்டும் அல்ல நிஜத்திலும் நன்றாகவே நடிக்கிறார். ரசிகர்களை முட்டாள்கள் என்று நினைத்துள்ளார் போன்று என்று விமர்சனம் எழுந்துள்ளது.