Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பட வாய்ப்புக்காக செக்ஸுக்கு அழைத்தார்கள் இயக்குனர்கள்: இளம் நடிகை பகீர் தகவல்
மும்பை: வாய்ப்பு கொடுக்கும் சாக்கில் சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தன்னை செக்ஸுக்கு அழைத்ததாக நடிகை பிரியங்கா ஜெயின் தெரிவித்துள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் பிரியங்கா ஜெயின். கோலி சோடா படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார். பிரியங்கா ரங்கிதரங்கா என்ற கன்னட படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனம் ஆடி சாண்டல்வுட்டில் அறிமுகமானார்.
இந்நிலையில் கன்னட திரையுலகம் பற்றி அவர் கூறுகையில்,
கோலி சோடா
எனக்கு 3 கன்னட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன். காரணம் வாய்ப்போடு சேர்த்து படுக்கைக்கும் அழைத்தார்கள். கோலி சோடா ரீமேக்கில் நடிக்க படுக்கைக்கு அழைக்காததால் ஒப்புக் கொண்டேன்.
மும்பை பொண்ணு
மும்பையில் இருந்து வந்த பொண்ணு தானே படுக்கைக்கு அழைத்தால் வந்துவிடுவேன் என நினைத்து சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் செக்ஸுக்கு அழைத்தார்கள். அவர்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை.
படத்திற்காக
படத்தின் ஹீரோயினாக விரும்பும் மும்பை பொண்ணு எதையும் செய்வாள் என்று தவறாக நினைத்துவிட்டனர். எனக்கு பட வாய்ப்பு அளிக்க வரும்போதே தயாரிப்பாளர் அல்லது இயக்குனருடன் படுக்கவும் அழைத்தார்கள்.
அதிர்ச்சி
இதை எல்லாம் கேட்டு என் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைத்து இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இப்படி இல்லை என்று அவர்களை சமாதானம் செய்தேன். என்னை நடிகையாக்கிப் பார்க்க நினைத்தார் என் தாய். ஆனால் அவருக்கு இந்த படுக்கை பிரச்சனை தெரியாது.
நல்லவர்கள்
சினிமா துறையில் நல்லவர்களும் உள்ளார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன். அப்போது தான் ரகு ஜெயா என்னை கோலி சோடா ரீமேக் படத்தின் நாயகியாக்கினார் என்றார் பிரியங்கா. 18 வயதாகும் பிரியங்கா 16 வயதில் திரை துறைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.