ஷாரூக்கான் சர்ச்சை... 'பிரபலம்னாலே பிராப்ளம்தான்'!- ப்ரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன் மை சிட்டி என்ற வீடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஷாருக்கான், தான் ஒரு முஸ்லிம் ஆக இருப்பதால் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து கூறிய கருத்துகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது.
எனினும், ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களை பொதுமக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். அத்தகைய பிரபலங்கள் தற்போது எளிதான இலக்காக அவர்களுக்கு உள்ளனர்," என்றார்.
சரி உங்களது பெயரின் பின்னால் கான் என இருந்தால் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கியிருப்பீர்கள் அல்லவா? என்று கேட்டனர் நிருபர்கள்.
அதற்கு பதிலளித்து பேசும்போது, "சோப்ரா என்ற பெயராலேயே அதிக சர்ச்சைகள் எழுந்தன. ஒன்றுமில்லாத விசயத்தில் இருந்து மிக பெரிய காரியங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில் இருந்து கொண்டு இத்தகைய கேள்வியை கேட்பது வெட்கக்கேடானது," என்று பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











