Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஹன்சிகாவுக்கு எதிராக போலீசுக்கு செல்லும் 'போக்கிரி ராஜா' தயாரிப்பாளர்?
சென்னை: நடிகை ஹன்சிகாவுக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்க, தயாரிப்பாளர் செல்வகுமார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் வெளியாகி தோல்வியைத் தழுவிய படம் 'போக்கிரி ராஜா'. ஜீவாவின் 25 வது படமாக வெளியான இப்படத்தை 'புலி' புகழ் செல்வகுமார் தயாரித்திருந்தார்.
இப்படத்தின் பிரஸ் மீட்டுக்கு வருவதாக கூறிய ஹன்சிகா கடைசி நேரத்தில் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் '' போக்கிரி ராஜா பிரஸ் மீட்டுக்கு வருவதாக உறுதி கூறிய ஹன்சிகா கடைசி நேரத்தில் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
பயணம் மற்றும் அவரின் தங்குமிடம் போன்றவற்றிற்கு மட்டும் சில லட்சங்களை செலவழித்து இருக்கிறேன். எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ஹன்சிகா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
ஆனால் ஹன்சிகா தரப்பிலிருந்து இதற்கான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால் நான் செலவு செய்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என போலீசில் ஹன்சிகா மீது புகார் கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
'போகன்' தவிர வேறு தமிழ்ப்படங்கள் எதுவும் ஹன்சிகா கைவசம் இல்லாததால், தற்போது அவரின் கவனம் தெலுங்குத் திரையுலகின் மீது பதிந்திருக்கிறது.